ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் விநாயகர்ப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
விநாயகர்ச் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பந்தல்கள் அமைத்து விநாயகர்ச் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வரும் நிலையில், விநாயகர்ச் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநில எரிசக்தி துறை அமைச்சர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் விநாயகர்ப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.