இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!
Oct 14, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

சீனாவின் கெடுபிடி காரணமாக, ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் ஐ-போன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தது ஆப்பிள் நிறுவனம்.

அண்மையில், இந்தியா மீதான வரி விதிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பைக் கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மிரட்டி வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார். இதற்குப் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் தங்களது தற்போதைய திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி ஆலையில், கடந்த ஆண்டு மட்டும் 2 கோடி ஐ-போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஐ-போன் 15 மற்றும் ஐ-போன் 16 ஆகியவை அடங்கும்.

தற்போது ஆண்டுதோறும் ஐ-போன் உற்பத்தியை 6 கோடி யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாகப் பெங்களூரு, புனேவில் புதிய ஷோரூம்களைத் திறக்கும் ஆப்பிள் நிறுவனம், தொடர்ச்சியாக மும்பை, நொய்டாவிலுரும் புதிய ஸ்டோர்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐ-போன் 17-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளைத் தாமதப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது.

அதை உறுதிபடுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடரும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் கத்தாரில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் ஐ-போன் உற்பத்தி கட்டமைப்புகளை அமைப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். கடந்த காலாண்டில் அமெரிக்காவில் விற்கப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், ஒரு காலத்தில் ஐபோன் உற்பத்தியில் ஆதிக்க மையமாக இருந்த சீனா, தற்போது பெரும்பாலும் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளின் சந்தைகளுக்குச் சேவை அளிப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் எதிர்வினையாற்றியுள்ளது.

வலுவான சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் இருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐ-போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதோடு, உள்நாட்டு விற்பனையும் இரட்டை இலக்கை அடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனச் சிஇஓ குக் கூறியுள்ளார்.

இதன் மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு ஆப்பிள் நிறுவனம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Tags: Apple is determined to manufacture iPhones in India: Trump's threats notwithstandingஇந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதிடிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்I phoneIndiausaapple i phoneDonald Trump
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Next Post

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

Related News

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Load More

அண்மைச் செய்திகள்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies