இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!
Aug 27, 2025, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

சீனாவின் கெடுபிடி காரணமாக, ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் ஐ-போன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தது ஆப்பிள் நிறுவனம்.

அண்மையில், இந்தியா மீதான வரி விதிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பைக் கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மிரட்டி வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார். இதற்குப் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் தங்களது தற்போதைய திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி ஆலையில், கடந்த ஆண்டு மட்டும் 2 கோடி ஐ-போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஐ-போன் 15 மற்றும் ஐ-போன் 16 ஆகியவை அடங்கும்.

தற்போது ஆண்டுதோறும் ஐ-போன் உற்பத்தியை 6 கோடி யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாகப் பெங்களூரு, புனேவில் புதிய ஷோரூம்களைத் திறக்கும் ஆப்பிள் நிறுவனம், தொடர்ச்சியாக மும்பை, நொய்டாவிலுரும் புதிய ஸ்டோர்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐ-போன் 17-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளைத் தாமதப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது.

அதை உறுதிபடுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடரும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் கத்தாரில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் ஐ-போன் உற்பத்தி கட்டமைப்புகளை அமைப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். கடந்த காலாண்டில் அமெரிக்காவில் விற்கப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், ஒரு காலத்தில் ஐபோன் உற்பத்தியில் ஆதிக்க மையமாக இருந்த சீனா, தற்போது பெரும்பாலும் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளின் சந்தைகளுக்குச் சேவை அளிப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் எதிர்வினையாற்றியுள்ளது.

வலுவான சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் இருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐ-போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதோடு, உள்நாட்டு விற்பனையும் இரட்டை இலக்கை அடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனச் சிஇஓ குக் கூறியுள்ளார்.

இதன் மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு ஆப்பிள் நிறுவனம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Tags: டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்I phoneIndiausaapple i phoneDonald TrumpApple is determined to manufacture iPhones in India: Trump's threats notwithstandingஇந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி
ShareTweetSendShare
Previous Post

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

Next Post

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Related News

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies