செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!
Oct 14, 2025, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – ஜப்பான் சுனாமியைத் தொடர்ந்து பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றன. 2025ம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று கூறினார், அவை நடந்ததா? எதிர்காலத்தில் நடப்பவை என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

“Nostradamus of the Balkans” என்று அழைக்கப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற, தீர்க்கதரிசியான பாபா வாங்கா, தனது விநோதமான கணிப்புகளால், கடந்த தலைமுறையை மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரையும் ஈர்த்து வருகிறார்.

2025 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகளை வாங்கா முன்னரே கணித்திருந்தார்…. குறிப்பாக மியான்மர் நிலநடுக்கம், உலகளாவிய மக்களைப் பாதிக்கும் நில அதிர்வு பேரழிவுகள் பற்றிய அவரது பார்வையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.

அவரது கணிப்புகள் தெளிவற்றவை என்ற வாதங்களை ஒருதரப்பினர் முன் வைத்தாலும், அண்மையில் நடந்த பேரழிவுகள், அவரது தொலைநோக்குப் பார்வைக் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளன.

2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படும் என்ற பாபா வாங்காவின் கணிப்பின்படி, அரசியல் ஸ்திரமின்மை, பிராந்திய மோதல்கள், உள்நாட்டுப் பிரச்னை, பொருளாதார ஸ்திரமின்மை ஏற்படும் என்ற நிலையில், இத்தகைய கணிப்புகள் வளர்ந்து வரும் மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த உலகளாவிய கவலைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

போர்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்கு மேலாக, 2025ம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரப் பேரழிவு அவர்க் கணித்திருந்த நிலையில், தற்போதைய சர்வதேச அளவிலான பொருளாதார, அரசியல் நகர்வுகள் அதையே எடுத்துக் காட்டுவதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

2025ம் ஆண்டுக்குப் பிறகும் தொடரும் அவரது கணிப்புகள் 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்ற நிலைக்கு நீண்டிருக்கிறது. 2028ம் ஆண்டில் வெள்ளி கிரக ஆய்வும், புதிய ஆற்றல் வளங்களைக் கண்டறியும் சம்பவங்களும் நடக்கும் என்கிறது பாபா வாங்காவின் கணிப்பு.

2033ம் ஆண்டில் பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் உயரும் என்றும், 2076ம் ஆண்டு பல நாடுகளில் கம்யூனிசம் பரவும் என்றும் கணித்திருக்கிறார். 2130ம் ஆண்டு வேற்று கிரகவாசிகள் அல்லது வேற்றுகிரகத்துடன் தொடர்பு ஏற்படும் என்பதும், 3005ம் ஆண்டு செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் வெடிக்கும் என்றும் கூறியிருப்பதும் வியப்பளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

2170ம் ஆண்டு உலகையே உறிஞ்சக்கூடிய கடுமையான தண்ணீர்  பஞ்சம் ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்திருக்கிறார். 3797ம் ஆண்டு வாழத் தகுதியற்ற கிரகமாகப் பூமி மாறிவிடும் என்றும், மனிதர்கள் பூமியை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார் என்றும் பாபா வாங்கா கணித்திருப்பது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

5079ம் ஆண்டில் உலகம் முடிவுக்கு வரப் போவதாக அவர்  கணித்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. காலநிலை, தொழில்நுட்பம் மற்றும் மனிதப் பரிணாம வளர்ச்சி ஆகியவை ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளதைப் பாபா வாங்காவின் கால வரிசைக் கணிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது மனித நாகரிக வரலாற்றின் நீண்டதொலைவையும் படம் பிடித்து காட்டுவதாக உள்ளது.

பாபா வாங்கா 1996ம் ஆண்டு மறைந்திருந்தாலும், அவரது கணிப்புகள், இயற்கைப் பேரழிவுகள், வேற்று கிரகத் தொடர்பு மற்றும் சமூகப் பரிணாமம் பற்றிய அவரது கண்ணோட்டம், எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளைக் கண்முன் நிறுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: பாபா வாங்காWill Baba Vanga's predictions come true? : Which zodiac signs will win crores?War with Martians: The world will end in the year 5079பாபா வாங்காவின் கணிப்புகள்Baba Vanga's predictions
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

Next Post

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies