யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் முக்கிய தலைவரான காய் கி-யைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

இந்தியா – சீனா இடையேயான உறவில் பல ஆண்டுகளாகவே விரிசல் நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னை, பாகிஸ்தான் உடனான நெருங்கிய உறவு உள்ளிட்டவை அதற்கான பிரதான காரணமாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் சீனாவுடன் சுமூக உறவைக் கடைபிடிக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்நிலையில்தான், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு எந்தளவு முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறதோ, அதற்கு இணையாகக் காய் கி என்பவரை மோடி சந்தித்துப் பேசியதும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

காய் கி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய தலைவராக உள்ளார். பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ள அவர், அதிபர் ஜி ஜின்பிங்கின் வலது கரமாகக் கருதப்படுகிறார். சீன அரசு எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகளிலும் இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். மிகவும் கறாரான தலைவரான இவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரிக்காத மனிதர் என அழைக்கப்படுகிறார்.

பெரும்பாலும் இவர் வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பதில்லை. மீறி அவர்  சந்தித்தால் அது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகத்தான் இருக்கும் என யூகித்துகொள்ளலாம். இப்படிப்பட்ட காய் கி-தான் தற்போது பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் 45 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நீடித்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட எந்த வெளிநாட்டுத் தலைவரையும் காய் கி சந்திக்கவில்லை என்பதில் இருந்தே, இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

எல்லைப் பிரச்னை, இரு நாட்டு உறவை மேம்படுத்துதல், வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடியும், காய் கியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத்தான், லிபுலேக், ஷிப்கி லா, நாது லா உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது, நேரடி விமான சேவையை மீண்டும் தொடர்வது, விசா நடைமுறையை எளிதாக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான காய் கியையும் அடுத்தடுத்து பிரதமர் மோடி சந்தித்தது, இரு நாட்டு உறவின் நேர்மறையான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

Tags: இந்தியா - சீனாWho is this Kai Ki?: Why was the meeting with Modi important?யார் இந்த காய் கி?காய் கிPM Modichinaபிரதமர் மோடிsco
ShareTweetSendShare
Previous Post

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

Next Post

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies