பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!
Oct 22, 2025, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்தின் புகழிடம் பாகிஸ்தான் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் சிக்கியுள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்ற தாக்குதலுக்கு லஷ்கர் – இ – தொய்பாவின் நிழல் அமைப்பான THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பஹல்காம் தாக்குதலுக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைத்தது என்ற புலன் விசாரணையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தீவிரமாகக் களமிறங்கியது.

அதன்படி, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த துடிக்கும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக ஆய்வு செய்தனர். மொத்தம் 463 போன் கால்களை ரகசியமாகக் கேட்டதில், பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது அம்பலமாகி உள்ளது.

குறிப்பாக, மலேசியாவில் வசிக்கும் யாசீர் ஹயாத் என்ற நபர், THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்கு 9 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதை, என்ஐஏ அதிகாரிகள் உறுதிப்படுத்தனர். லஷ்கர் – இ – தொய்பாவின் முக்கிய தளபதியான சஜீத் மிர் உடன் யாசீர் ஹயாத் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யாசீர் ஹயாத்தின் வங்கி பரிவர்த்தனைகள், தொலைபேசி உரையாடல்கள், சமூகவலைதள CHATகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் என்ஐஏ அதிகாரிகள் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இந்த உண்மைகள் அனைத்தும் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் கண்டறியப்பட்டவை என நினைத்தால்…அதுதான் இல்லை… ஸ்ரீநகர், ஹந்த்வாரா உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் உயிரைப் பணயம் வைத்து நேரடியாகக் களமிறங்கி சோதனை மேற்கொண்டதன் பலன்தான் இது. சிறு சிறு துருப்பு சீட்டுகளையும் சாதாரணமாக எண்ணிவிடாமல், பயங்கரவாத கும்பலுக்கு அதிகாரிகள் வேட்டு வைத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமையின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு பாகிஸ்தான் என இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டிய நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் அது ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அதனை 100 சதவீதம் உறுதிப்படுத்தி இருக்கிறது என்ஐஏ.

இந்த ஆதாரத்தை FATF எனப்படும் நிதி நடவடிக்கைப் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் குரல் மேலும் வலுப்படும். இஸ்லாமபாத் ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தின் பின்னணியாகச் செயல்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிடும்.

இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சாம்பல் பட்டியலில் மீண்டும் இணைந்து விடுவோமோ என ஷெபாஷ் ஷெரீப் அரசு ஏற்கனவே அச்சத்தில் ஆழ்ந்திருக்க, தொட்டால் விடமாட்டோம் எனச் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓரம் கட்டி வருகிறது மத்திய பாஜக அரசு.

Tags: Those who funded the Pahalgam attack: Pakistan and Malaysia in troubleமலேசியா நாடுகள்PM Modipakistanபஹல்காம் தாக்குதல்சிக்கலில் பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

Next Post

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

Related News

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies