பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!
Jul 29, 2026, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்தின் புகழிடம் பாகிஸ்தான் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் சிக்கியுள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்ற தாக்குதலுக்கு லஷ்கர் – இ – தொய்பாவின் நிழல் அமைப்பான THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பஹல்காம் தாக்குதலுக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைத்தது என்ற புலன் விசாரணையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தீவிரமாகக் களமிறங்கியது.

அதன்படி, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த துடிக்கும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக ஆய்வு செய்தனர். மொத்தம் 463 போன் கால்களை ரகசியமாகக் கேட்டதில், பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது அம்பலமாகி உள்ளது.

குறிப்பாக, மலேசியாவில் வசிக்கும் யாசீர் ஹயாத் என்ற நபர், THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்கு 9 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதை, என்ஐஏ அதிகாரிகள் உறுதிப்படுத்தனர். லஷ்கர் – இ – தொய்பாவின் முக்கிய தளபதியான சஜீத் மிர் உடன் யாசீர் ஹயாத் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யாசீர் ஹயாத்தின் வங்கி பரிவர்த்தனைகள், தொலைபேசி உரையாடல்கள், சமூகவலைதள CHATகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் என்ஐஏ அதிகாரிகள் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இந்த உண்மைகள் அனைத்தும் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் கண்டறியப்பட்டவை என நினைத்தால்…அதுதான் இல்லை… ஸ்ரீநகர், ஹந்த்வாரா உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் உயிரைப் பணயம் வைத்து நேரடியாகக் களமிறங்கி சோதனை மேற்கொண்டதன் பலன்தான் இது. சிறு சிறு துருப்பு சீட்டுகளையும் சாதாரணமாக எண்ணிவிடாமல், பயங்கரவாத கும்பலுக்கு அதிகாரிகள் வேட்டு வைத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமையின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு பாகிஸ்தான் என இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டிய நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் அது ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அதனை 100 சதவீதம் உறுதிப்படுத்தி இருக்கிறது என்ஐஏ.

இந்த ஆதாரத்தை FATF எனப்படும் நிதி நடவடிக்கைப் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் குரல் மேலும் வலுப்படும். இஸ்லாமபாத் ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தின் பின்னணியாகச் செயல்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிடும்.

இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சாம்பல் பட்டியலில் மீண்டும் இணைந்து விடுவோமோ என ஷெபாஷ் ஷெரீப் அரசு ஏற்கனவே அச்சத்தில் ஆழ்ந்திருக்க, தொட்டால் விடமாட்டோம் எனச் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓரம் கட்டி வருகிறது மத்திய பாஜக அரசு.

Tags: PM Modipakistanபஹல்காம் தாக்குதல்சிக்கலில் பாகிஸ்தான்Those who funded the Pahalgam attack: Pakistan and Malaysia in troubleமலேசியா நாடுகள்
ShareTweetSendShare
Previous Post

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

Next Post

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies