பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடன் சமூக உறவை  பேண சீனா முடிவெடுத்துள்ள அதே நேரத்தில், பாகிஸ்தான் உடனான உறவை கைவிடவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டு வந்தது சீனா. நிதி உதவி வேண்டுமா? தருகிறேன். ஆயுதங்கள் வேண்டுமா? தருகிறேன். உட்கட்டமைப்பு மோசமாக உள்ளதா?. கவலை வேண்டாம். அதனையும் நானே பார்த்துகொள்கிறேன், எனப் பாகிஸ்தானுக்கு பார்த்துப் பார்த்து செய்து வந்தது சீன அரசு.

ஒருகட்டத்தில், தனக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் மேலே உள்ள சீனா பார்த்துகொள்ளும் என்ற மனநிலைக்குப் பாகிஸ்தான் வந்தது. ஆனால், அமெரிக்காவின் அடாவடியான 50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு காட்சிகள் மாற தொடங்கின. அமெரிக்கா என்ற உலகத் தாதாவுக்கு எதிராக, இந்தியாவும் சீனாவும் கரம்கோர்க்க முன்வந்தன.

அதற்கான அடித்தளத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அமைத்துக் கொடுத்தது. மோடியும், ஜி ஜின்பிங்கும் நேரில் சந்தித்துப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் கைக் கோர்த்துகொண்டு முஸ்தப்பா முஸ்தப்பா எனப் பாடல் மட்டும்தான் பாடவில்லை. மற்றபடி, அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிணைந்து செயல்படும் முடிவுக்கு இரு தலைவர்களும் வந்துள்ளனர்.

சீனாவும், இந்தியாவும் இணைந்தால் அமெரிக்காவுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக அதிகப் பாதிப்பை சந்திக்கவுள்ள நாடு, பாகிஸ்தான்தான். அதற்கான சமிக்ஞைகள் தற்போதே தெரிய தொடங்கிவிட்டன.

பாகிஸ்தான் அரசு கராச்சி -ரோஹ்ரி இடையே ரயில்வே பாதை அமைத்து வருகிறது. கராச்சி மற்றும் பெஷாவர் இடையேயான 1,726 கிலோ மீட்டர் தூரத்தை இணைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். பலுசிஸ்தான் பகுதியில் அமையவுள்ள சுரங்கங்களில் இருந்து கனிமங்களை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் ப்ராஜெக்டின் மொத்த வேல்யூ, சுமார் 60 ஆயிரம் கோடி. இதில் கணிசமான தொகையை வழங்குவதாகச் சீனா தெரிவித்திருந்தது. ஆனால், அந்தத் தொகையை வழங்க சீன அரசு தற்போது மறுத்து விட்டது.

சீன மின்நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையைப் பாகிஸ்தான் வழங்காமல் உள்ளது, கராச்சி – பெஷாவர்த் திட்டத்தில் பணியாற்றிய சீனர்கள் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டது, பாகிஸ்தானின் அமெரிக்கப் பாசம் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தப் பட்டியலில், சீனா- இந்தியா இடையே ஏற்பட்டுள்ள சுமூக உறவும் பிரதான காரணமாகத் தற்போது இணைந்துள்ளது.

சீனா கையை விரித்து விட்டதால், ஆசிய மேம்பாட்டு வங்கியின் கதவைப் பாகிஸ்தான் தட்டியுள்ளது. தங்களுக்கு உடனடியாக 2 பில்லியன் டாலர்த் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று நிதி கேட்டுச் சர்வதேச நாணய நிதியத்தின் வாசலில் பாகிஸ்தான் நின்றது. இன்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கிறது. நாளை எங்கு போய் நிற்கும் என்பது இனிதான் தெரியும்.

Tags: pakistan news todayChina is suffocating Pakistan? : Pakistan is standing at the door of the Asian Development Bankpakistanchinaபாகிஸ்தான்இந்தியா
ShareTweetSendShare
Previous Post

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Next Post

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies