பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!
Oct 22, 2025, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Sep 6, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடன் சமூக உறவை  பேண சீனா முடிவெடுத்துள்ள அதே நேரத்தில், பாகிஸ்தான் உடனான உறவை கைவிடவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டு வந்தது சீனா. நிதி உதவி வேண்டுமா? தருகிறேன். ஆயுதங்கள் வேண்டுமா? தருகிறேன். உட்கட்டமைப்பு மோசமாக உள்ளதா?. கவலை வேண்டாம். அதனையும் நானே பார்த்துகொள்கிறேன், எனப் பாகிஸ்தானுக்கு பார்த்துப் பார்த்து செய்து வந்தது சீன அரசு.

ஒருகட்டத்தில், தனக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் மேலே உள்ள சீனா பார்த்துகொள்ளும் என்ற மனநிலைக்குப் பாகிஸ்தான் வந்தது. ஆனால், அமெரிக்காவின் அடாவடியான 50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு காட்சிகள் மாற தொடங்கின. அமெரிக்கா என்ற உலகத் தாதாவுக்கு எதிராக, இந்தியாவும் சீனாவும் கரம்கோர்க்க முன்வந்தன.

அதற்கான அடித்தளத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அமைத்துக் கொடுத்தது. மோடியும், ஜி ஜின்பிங்கும் நேரில் சந்தித்துப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் கைக் கோர்த்துகொண்டு முஸ்தப்பா முஸ்தப்பா எனப் பாடல் மட்டும்தான் பாடவில்லை. மற்றபடி, அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிணைந்து செயல்படும் முடிவுக்கு இரு தலைவர்களும் வந்துள்ளனர்.

சீனாவும், இந்தியாவும் இணைந்தால் அமெரிக்காவுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக அதிகப் பாதிப்பை சந்திக்கவுள்ள நாடு, பாகிஸ்தான்தான். அதற்கான சமிக்ஞைகள் தற்போதே தெரிய தொடங்கிவிட்டன.

பாகிஸ்தான் அரசு கராச்சி -ரோஹ்ரி இடையே ரயில்வே பாதை அமைத்து வருகிறது. கராச்சி மற்றும் பெஷாவர் இடையேயான 1,726 கிலோ மீட்டர் தூரத்தை இணைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். பலுசிஸ்தான் பகுதியில் அமையவுள்ள சுரங்கங்களில் இருந்து கனிமங்களை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் ப்ராஜெக்டின் மொத்த வேல்யூ, சுமார் 60 ஆயிரம் கோடி. இதில் கணிசமான தொகையை வழங்குவதாகச் சீனா தெரிவித்திருந்தது. ஆனால், அந்தத் தொகையை வழங்க சீன அரசு தற்போது மறுத்து விட்டது.

சீன மின்நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையைப் பாகிஸ்தான் வழங்காமல் உள்ளது, கராச்சி – பெஷாவர்த் திட்டத்தில் பணியாற்றிய சீனர்கள் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டது, பாகிஸ்தானின் அமெரிக்கப் பாசம் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தப் பட்டியலில், சீனா- இந்தியா இடையே ஏற்பட்டுள்ள சுமூக உறவும் பிரதான காரணமாகத் தற்போது இணைந்துள்ளது.

சீனா கையை விரித்து விட்டதால், ஆசிய மேம்பாட்டு வங்கியின் கதவைப் பாகிஸ்தான் தட்டியுள்ளது. தங்களுக்கு உடனடியாக 2 பில்லியன் டாலர்த் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று நிதி கேட்டுச் சர்வதேச நாணய நிதியத்தின் வாசலில் பாகிஸ்தான் நின்றது. இன்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கிறது. நாளை எங்கு போய் நிற்கும் என்பது இனிதான் தெரியும்.

Tags: pakistanchinaபாகிஸ்தான்இந்தியாpakistan news todayChina is suffocating Pakistan? : Pakistan is standing at the door of the Asian Development Bank
ShareTweetSendShare
Previous Post

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Next Post

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

Related News

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies