நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து - நீர் கசிவு தான் காரணமா?
Nov 3, 2025, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Web Desk by Web Desk
Sep 14, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்கு நீர்கசிவு காரணமாக இருக்கலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 260 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த 110 பேரின் குடும்பத்தினர், ஏர் இந்தியா மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான பீஸ்லி ஆலன் சார்பில் நடத்தப்படும் இந்த வழக்கில், மைக் ஆண்ட்ரூஸ் என்ற பிரபல வழக்கிறஞர் வாதாடி வருகிறார்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனவும், விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கைப் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விமானத்தின் வடிவமைப்பு இந்த விபத்துக்கு முக்கியான காரணமாக அமைந்திருக்குமோ எனவும் அவர்  சந்தேகம் தெரிவித்துள்ளார். கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நீர்க்கசிவு ஏற்பட்டு, மின்சாரப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள தகவல்களை மேற்கோள்காட்டியுள்ளார்.

நீர்க் கசிவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்றால், விமானத்தை வடிவமைத்த போயிங் நிறுவனம்தான் அதற்கு பொறுப்பேற்ற வேண்டும் என வழக்கிறஞர் மைக் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார். தனது சட்ட நிறுவனம் இன்னும் கூடுதல் ஆவணங்களைச் சேகரித்து வருவதாகவும், துறைச் சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏர் இந்தியா இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இது தொடர்பாகப் பேசியிருந்த அவர், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ரத்தன் டாடா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், இத்தகைய சூழலே வந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiaair india plane accidentThe Air India plane crash that shook the country - was it caused by a water leak?
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

Next Post

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies