உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் - முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!
Nov 5, 2025, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப்படையின் பிரம்மாஸ்திரமாக விளங்கும் ரஃபேல் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, விமானப்படையை அதிநவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அதிகச் செயல் திறன்கொண்ட ஜெட் என்ஜிகள் உள்ளிட்டவற்றை வாங்கவும், சுதர்சன் சக்ர வான் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிக்கவும் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான், விமானப்படையில் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ராணுவத்திற்குத் தேவையான அனைத்து ரஃபேல் விமானங்களும் வெளிநாட்டிடம் இருந்தான் வாங்கப்பட்டு வந்துள்ளன. இந்தமுறை, அந்த விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படை, பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 114 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தியில் இதுதான் மிகப்பெரிய உச்சமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேக் இன் இண்டியா திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இந்த ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 60 சதவீத்திற்கும் அதிகமான பங்கு இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கும்.

மேலும், ரஃபேல் விமானங்களின் எம்-88 என்ஜின்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கப் பணிகளுக்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆலை ஒன்றை அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரஃபேல் விமானங்கள் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியிருந்தன. இதனையடுத்தே, அந்த விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேற்கொண்டு 26 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், உள்நாட்டில் மேலும் 114 விமானங்கள் தயாரிக்கப்படும்பட்சத்தில், அவற்றின் மொத்த எண்ணிக்கை 176ஆக உயரும். அதன்மூலம், இந்திய விமானப்படையின் வலிமை ஈடுஇணையற்ற ஒன்றாக உருவெடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Tags: Rafale aircraft to be manufactured domestically - Indian Air Force submits proposalஉள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள்indian armyஇந்திய விமானப்படைரஃபேல் விமானங்கள்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்மாற்றி – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Next Post

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Related News

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies