"உங்களுடன் என்றும் நான் இருப்பேன்" - மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி
Sep 15, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 14, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூர்  சென்றார். அங்கு அம்மாநில மக்களுடன் கலந்துரையாடிய அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.

2023ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அம்மாநிலத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில், கலவரச் சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாகப் பிரதமர் மோடி மணிப்பூர் பயணித்தார்.

தலைநகர் இம்பால் சென்றடைந்த அவரை மணிப்பூர் மாநில சிறுமிகள் பூங்கொத்து கொடுத்தும், மோடியின் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றனர். அப்போது சிறுவன் ஒருவன் மணிப்பூரின் பாரம்பரிய தொப்பியைப் பிரதமருக்கு அணிவித்தார். அதனை அவர் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.பின்னர், மணிப்பூர் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய சிறுமி, மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்குக் கண்ணீர் மல்க நன்றித் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் சுராசந்த்பூருக்குப் பிரதமர் மோடி சென்றார். அப்போது பல கிலோமீட்டர்த் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் தேசியக்கொடியுடன் நின்று மணிப்பூர் மாணவர்களும், மக்களும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த அவர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக
சுமார் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தைரியம் மற்றும் துணிச்சலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மணிப்பூர் எனப் புகழாரம் சூட்டினார். மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்குத் தலைவணங்குவதாக தெரிவித்த அவர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மணிப்பூர்ப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எனக் கூறினார்.

மேலும், வளர்ச்சிக்கு அமைதி மிகவும் அவசியமானது எனவும், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதமர்த் தெரிவித்தார். அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மணிப்பூர் மக்களுக்குப் பக்கபலமாக தானும், மத்திய அரசும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மணிப்பூர் பயணத்திற்கு முன்னதாக, மிசோரம் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, 51 கிலோ மீட்டர் நீளமுள்ள பைராயி- சாய்ராங் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Tags: PM Modiபிரதமர் மோடிமணிப்பூர்"I will always be with you" - PM Modi inspires the people of Manipur
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Next Post

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Load More

அண்மைச் செய்திகள்

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies