"உங்களுடன் என்றும் நான் இருப்பேன்" - மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூர்  சென்றார். அங்கு அம்மாநில மக்களுடன் கலந்துரையாடிய அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.

2023ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அம்மாநிலத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில், கலவரச் சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாகப் பிரதமர் மோடி மணிப்பூர் பயணித்தார்.

தலைநகர் இம்பால் சென்றடைந்த அவரை மணிப்பூர் மாநில சிறுமிகள் பூங்கொத்து கொடுத்தும், மோடியின் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றனர். அப்போது சிறுவன் ஒருவன் மணிப்பூரின் பாரம்பரிய தொப்பியைப் பிரதமருக்கு அணிவித்தார். அதனை அவர் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.பின்னர், மணிப்பூர் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய சிறுமி, மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்குக் கண்ணீர் மல்க நன்றித் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் சுராசந்த்பூருக்குப் பிரதமர் மோடி சென்றார். அப்போது பல கிலோமீட்டர்த் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் தேசியக்கொடியுடன் நின்று மணிப்பூர் மாணவர்களும், மக்களும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த அவர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக
சுமார் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தைரியம் மற்றும் துணிச்சலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மணிப்பூர் எனப் புகழாரம் சூட்டினார். மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்குத் தலைவணங்குவதாக தெரிவித்த அவர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மணிப்பூர்ப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எனக் கூறினார்.

மேலும், வளர்ச்சிக்கு அமைதி மிகவும் அவசியமானது எனவும், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதமர்த் தெரிவித்தார். அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மணிப்பூர் மக்களுக்குப் பக்கபலமாக தானும், மத்திய அரசும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மணிப்பூர் பயணத்திற்கு முன்னதாக, மிசோரம் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, 51 கிலோ மீட்டர் நீளமுள்ள பைராயி- சாய்ராங் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Tags: PM Modiபிரதமர் மோடிமணிப்பூர்"I will always be with you" - PM Modi inspires the people of Manipur
ShareTweetSendShare
Previous Post

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Next Post

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies