பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
Mar 15, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 07:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2014-ல் 11வது இடத்திற்குச் சென்றிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 4-வது இடத்திற்குக் கொண்டு வந்தவர்  பிரதமர் மோடி எனப் புகழராம் சூட்டியுள்ளார்.

2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கிராமப்புறங்களில் மின்சார வசதி, வீடுதோறும் கழிப்பறைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்தப்பட்டது என்றும், 2014ஆம் ஆண்டில் பத்தரைக் கோடி வீடுகளில் இருந்து சமையல் எரிவாயு இணைப்பு தற்போது 40 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு தொலைதூரக் கனவாக இருந்தது எனக்கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, 41 கோடிக்கும் அதிகமானவர்கள் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்து பயனடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, பயனாளிகளுக்கு நேரடிப்பண பரிமாற்றத்தை விரைவாகவும், ஊழலற்றதாகவும் ஆக்கியது எனவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு வரை வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர்ப் பற்றி எரிந்து கொண்டிருந்தாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு சூழ்நிலை மாறியதாகத் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, வடகிழக்கு பகுதியில் வன்முறையைச் சமாளிக்கும் பொறுப்பைத் தனக்கு வழங்கியதைச் சுட்டிக்காட்டினார்.

வடகிழக்கு பகுதியில் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த நாகா கிளர்ச்சியைத் தீர்க்க பிரதமர் மோடி தமக்கு உத்தரவிட்டதாகவும், ஒரு வருடத்திற்குள் நாகா கிளர்ச்சியாளர்கள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு அமைதி பாதைக்குத் திரும்பினர் எனவும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடியுடன் பணியாற்றியதில் தனக்குத் தனிப்பட்ட அனுபவம் உள்ளது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து அங்கு அமைதி நிலவிட பிரதமர் மோடி வழிவகைச் செய்தார் எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில் ஒரு புதிய பாரதத்திற்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று எனக்கூறியுள்ள அவர், உலகில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மோடியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருவதாகவும்,
ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய சகோதரத்துவத்தை நம்பும் பிரதமர் மோடி ஒரு ரிஷி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பிரதமர் மோடி மிகுந்த அன்பு வைத்துள்ளதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் திருவள்ளுவர், பாரதியாருக்குத் தமிழ் இருக்கைகளைப் பிரதமர் மோடி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காசி-தமிழ் சங்கமம், ராஜேந்திரச் சோழரின் 1000வது பிறந்தநாளைப் பிரமாண்டமாகக் கொண்டாடியது பிரதமர் மோடியின் தமிழ் வளர்ச்சிக்குச் சிறந்து சான்றுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Prime Minister Modi's tenure is not a chapter in the country's historybut an era - Governor R.N. Ravi praisesஆளுநர் ஆர்.என். ரவிபிரதமர் மோடி
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

Next Post

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies