சலுகையை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக இந்தியா வர்த்தகம் செய்ய அளிக்கப்பட்டு வந்த சலுகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரானின் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தில் சபஹார்  துறைமுகம் அமைந்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா எளிதில் வர்த்தகம் செய்வதற்கான பாலமாக, இந்தத் துறைமுகம் இருந்து வருகிறது.

இந்தத் துறைமுகத்தை குத்தகைக்கு எடுக்க 2003ம் ஆண்டு முதலே இந்தியா முயன்று வந்தது. ஆனால், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதரத் தடைகளால் இந்தியாவால் அந்த துறைமுகத்தை  குத்தகைக்கு எடுக்க முடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஈரான் மீது விதித்த தனது பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. அதன் பயனாக, சபஹார்  துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஈரான் அரசுடன் இந்தியா மேற்கொண்டது.

இதற்காகப் பெரும் தொகையையும் இந்தியா செலவிட்டது. சுமார் 120 மில்லியன் டாலரை முதலீடாகவும், 250 மில்லியன் டாலரை கடனாகவும் வழங்க இந்தியா முன்வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிற நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு வலுப்பட்டது. வெளிநாட்டில் ஒரு துறைமுகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல்முறை.

இந்தச் சூழலிதான், சபஹார்  துறைமுகம் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவிற்கு வழங்கப்பட்ட விலக்கை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவு வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சபஹார்  துறைமுகத்தில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரானுக்கும், இந்தியாவுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இருந்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கச் சபஹார் துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை அமெரிக்கா தற்போது ரத்து செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆணு ஆயுதம் தயாரிககும் விவகாரத்தில் ஈரான் மீது ஏற்கனவே அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. எனவே, ஈரானை மிரட்டி பார்ப்பதற்காகவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

விரைவில் தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளதால், வேறு நாடுகளின் துறைமுகங்களை  பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Tags: IndiausaUS cancels concession - plans to put more pressure on India..?சலுகையை ரத்து செய்த அமெரிக்கா
ShareTweetSendShare
Previous Post

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

Next Post

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies