கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளருடன், வெங்காய வியாபாரி குடும்பத்தினருடன் வந்து தகராறில் ஈடுபட்டுத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குப் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வரும் நிலையில், பழனியைச் சேர்ந்த நபர் குடும்பத்திருடன் சரக்கு வாகனத்தில் வெங்காயம் விற்பனை செய்ய வந்துள்ளார்.
பெருமாள்மலைப் பகுதியில் வெங்காயம் விற்பனை செய்தபோது, அந்தப் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் ராஜா என்பவர், வியாபாரியிடம் வெங்காயம் வாங்கியுள்ளார்.
பின்னர், வாங்கிய வெங்காயத்தை சரியில்லை எனக்கூறி திருப்பி அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்காய வியாபாரி, தனது குடும்பத்தினருடன் ராஜாவின் பழக்கடைக்கு வந்து பொருட்களை வாங்கியுள்ளனர்.
மேலும், பொருட்கள் சரியில்லை எனக்கூறி ராஜாவிடம் வெங்காய வியாபாரியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த ராஜா, அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.