தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் - சுனில் அம்பேகர்
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 23, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தில் நாட்டில் சுயசார்பு கொள்கையை பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியுடன் தொடங்கி அடுத்த ஆண்டு தசரா வரை தொடரும் என்றார்.

இது எங்கள் பயணத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்தியாவை காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவித்து, தன்னம்பிக்கை கொண்ட, சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதற்கான ஒரு நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்,

1995 முதல் ஆர்எஸ்எஸ் ஆண்டுதோறும் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய விஜயதசமி உத்சவத்தின் தொடக்க நிகழ்வாக அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும்.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார், மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்துவார். கடந்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் (தன்னார்வலர்கள்) முழு சீருடையில் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு வருகை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் அம்பேகர் கூறினார்.

முன்னாள் ராணுவத் தளபதி ராணா பிரதாப் கலிதா, டெக்கான் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் கே.வி. கார்த்திக், பஜாஜ் ஃபின்சர்வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புனே சஞ்சீவ் பஜாஜ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

உலகளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே அனைவரின் விரும்பம் எனக்கூறிய அவர், இந்தியாவின் இலக்கு வெற்றிபெற ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கடமைகளை செய்யும் எனவும் தெரிவித்தார்.

மேலும், குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறையின் சித்தாந்தத்தின் மையம் என்ற விழிப்புணர்வை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் குறிப்பிட்டார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்ற இந்தியா, காலனித்துவ மனப்பான்மையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்றார்.

காலனித்துவ செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த இது ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

Tags: MAHARASHTRANagpurRSS Spokesperson Sunil AmbekarVijayadashamiRSS centenary celebrationSunil Ambekar pressmeet
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies