தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் - சுனில் அம்பேகர்
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 23, 2025, 09:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்காலத்தில் நாட்டில் சுயசார்பு கொள்கையை பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியுடன் தொடங்கி அடுத்த ஆண்டு தசரா வரை தொடரும் என்றார்.

இது எங்கள் பயணத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்தியாவை காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவித்து, தன்னம்பிக்கை கொண்ட, சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதற்கான ஒரு நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்,

1995 முதல் ஆர்எஸ்எஸ் ஆண்டுதோறும் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய விஜயதசமி உத்சவத்தின் தொடக்க நிகழ்வாக அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும்.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார், மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்துவார். கடந்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் (தன்னார்வலர்கள்) முழு சீருடையில் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு வருகை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் அம்பேகர் கூறினார்.

முன்னாள் ராணுவத் தளபதி ராணா பிரதாப் கலிதா, டெக்கான் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் கே.வி. கார்த்திக், பஜாஜ் ஃபின்சர்வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புனே சஞ்சீவ் பஜாஜ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

உலகளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே அனைவரின் விரும்பம் எனக்கூறிய அவர், இந்தியாவின் இலக்கு வெற்றிபெற ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கடமைகளை செய்யும் எனவும் தெரிவித்தார்.

மேலும், குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறையின் சித்தாந்தத்தின் மையம் என்ற விழிப்புணர்வை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் குறிப்பிட்டார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்ற இந்தியா, காலனித்துவ மனப்பான்மையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்றார்.

காலனித்துவ செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த இது ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

Tags: Sunil Ambekar pressmeetMAHARASHTRANagpurRSS Spokesperson Sunil AmbekarVijayadashamiRSS centenary celebration
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies