H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!
Jan 14, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2025, 08:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

H-1B விசா கட்டண உயர்வு இந்திய ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், H 1B விசா நடைமுறையில் மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை ட்ரம்ப் கொண்டுவந்துள்ளார். அது என்ன என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அண்மையில் H-1B விசாவின் கட்டணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்த்தினார். இதனால் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம், ஒரேயடியாக 88 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. இந்தச் சூழலில் விசா விதிமுறையில் மேலும் ஒரு மாற்றத்தை ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு 85,000 H-1B விசாக்களை மட்டும்தான் வழங்கி வருகிறது. ஆனால், அந்த எண்ணிக்கையை காட்டிலும் அதிகமான விண்ணப்பங்கள், விசா கோரி தாக்கல் செய்யப்படும். அப்போது, கணினியை கொண்டு லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படும்.

இந்த முறைக்கு அதிபர் ட்ரம்ப் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். லாட்டரி முறையில் அல்லாமல், ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில்தான் விசாக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறிவந்தார். தற்போது, ட்ரம்பின் விருப்பப்படியே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு H-1B விசாவில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 162,528 டாலர்களுக்கு அதிகமாகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இனி அதிக முன்னுரிமை பெறவுள்ளனர். திறமை அடிப்படையில் அல்லாமல், ஊதியத்தின் அடிப்படையில் விசா வழங்கும் ட்ரம்பின் முடிவுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Manifest Law என்ற குடியேற்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான Nicole Gunara, புதிய விதிமுறை குறைந்த ஊதியம் பெறுபவர்களை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, “மெட்டா நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் டாலர் ஊதியம் பெறுபவரும், புதிதாகத் தொடங்கப்பட்ட சிறிய நிறுவனத்தில் 70,000 ஆயிரம் டாலர் ஊதியம் வாங்குபவரும் விசா வேண்டி விண்ணப்பித்தால், மெட்டா நிறுவன ஊழியருக்குதான் H-1B விசா கிடைக்கும். இதனால், அந்த சிறிய startup நிறுவனமும் பாதிக்கப்படும்.

குறைந்த ஊதியம் பெறுபவரும் பாதிக்கப்படுவார்.” என அவர் கூறியுள்ளார். Menlo Ventures நிறுவனத்தின் பங்குதாரரான Deedy Das-சும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். “படிப்பு முடித்துப் புதிதாக வேலைக்குச் செல்வோர் குறைந்த ஊதியம்தான் வாங்குவார்கள்.

அந்தக் குறைந்த ஊதியத்தை காரணம் காட்டி விசா வழங்க மறுப்பது தவறான முன்மாதிரியாக அமையும்” என அவர் கூறியுள்ளார். H-1B விசா பெறுபவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, கட்டண உயர்வை போலவே, லாட்டரி முறை நீக்கமும் இந்தியர்களைதான் அதிகம் பாதிக்கும் சூழல் உள்ளது.

Tags: IndiausaDonald TrumpH1B visaH-1B visa lottery process now canceled: Indian workers to face the most impactH-1B விசா
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

Next Post

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies