ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்களது போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தினால், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதனால் இந்த அசாதாரண சூழல்? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

நேட்டோ உறுப்பு நாடான எஸ்தோனியாவின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் மூன்று மிக் 31 ரக போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து சுமார் 12 நிமிடங்கள் வரை பறந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், எஸ்தோனியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதேபோல், போலாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் வான் எல்லைகளிலும், ரஷ்ய ட்ரோன்கள் பறந்தாக குற்றச்சாட்டு எழ, நேட்டோ அமைப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியதால், போர் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து பிரான்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொது செயலர் மார்பிரட், ரஷ்யாவின் அத்துமீறல் தொடருமானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து பிரச்னையை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் ஊருடுவினால், சுட்டுவீழ்த்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுக்க, அது ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ், தங்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் நிச்சயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ளதாக ஆவேசப்பட்ட லாவ்ரோ, இனியும் பொறுமை காக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேபோல் பிரான்ஸ் நாட்டிற்கான ரஷ்ய தூதராக பணியாற்றும் மெஸ்கோவ்வும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால், தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக தான் கருத முடியும் என கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் பறந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்துவிட்டு எந்த வீரவசனத்தையும் பேசுங்கள் என நேட்டோ அமைப்பிற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோவில் இணையக்கூடாது என மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போர் புரிந்து வரும் நிலையில், தற்போதைய மோதல் போக்கு மேலும் மேலும் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.

Tags: Estonian Foreign MinistryRussian MiG-31 fighter jetsNATO Secretary General Margrethe von der LeyenRussia violation airspacerussiaUnited StatesRussia warningWorld War IIIfighter jetsEstonia
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

Next Post

மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, எல்.முருகன் பங்கேற்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies