ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Sep 27, 2025, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Sep 27, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்களது போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தினால், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதனால் இந்த அசாதாரண சூழல்? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

நேட்டோ உறுப்பு நாடான எஸ்தோனியாவின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் மூன்று மிக் 31 ரக போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து சுமார் 12 நிமிடங்கள் வரை பறந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், எஸ்தோனியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதேபோல், போலாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் வான் எல்லைகளிலும், ரஷ்ய ட்ரோன்கள் பறந்தாக குற்றச்சாட்டு எழ, நேட்டோ அமைப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியதால், போர் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து பிரான்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொது செயலர் மார்பிரட், ரஷ்யாவின் அத்துமீறல் தொடருமானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து பிரச்னையை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் ஊருடுவினால், சுட்டுவீழ்த்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுக்க, அது ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ், தங்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் நிச்சயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ளதாக ஆவேசப்பட்ட லாவ்ரோ, இனியும் பொறுமை காக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேபோல் பிரான்ஸ் நாட்டிற்கான ரஷ்ய தூதராக பணியாற்றும் மெஸ்கோவ்வும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால், தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக தான் கருத முடியும் என கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் பறந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்துவிட்டு எந்த வீரவசனத்தையும் பேசுங்கள் என நேட்டோ அமைப்பிற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோவில் இணையக்கூடாது என மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போர் புரிந்து வரும் நிலையில், தற்போதைய மோதல் போக்கு மேலும் மேலும் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.

Tags: fighter jetsEstoniaEstonian Foreign MinistryRussian MiG-31 fighter jetsNATO Secretary General Margrethe von der LeyenRussia violation airspacerussiaUnited StatesRussia warningWorld War III
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

Related News

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies