ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Aug 1, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்களது போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தினால், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதனால் இந்த அசாதாரண சூழல்? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

நேட்டோ உறுப்பு நாடான எஸ்தோனியாவின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் மூன்று மிக் 31 ரக போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து சுமார் 12 நிமிடங்கள் வரை பறந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், எஸ்தோனியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதேபோல், போலாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் வான் எல்லைகளிலும், ரஷ்ய ட்ரோன்கள் பறந்தாக குற்றச்சாட்டு எழ, நேட்டோ அமைப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியதால், போர் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து பிரான்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொது செயலர் மார்பிரட், ரஷ்யாவின் அத்துமீறல் தொடருமானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து பிரச்னையை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் ஊருடுவினால், சுட்டுவீழ்த்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுக்க, அது ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ், தங்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் நிச்சயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ளதாக ஆவேசப்பட்ட லாவ்ரோ, இனியும் பொறுமை காக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேபோல் பிரான்ஸ் நாட்டிற்கான ரஷ்ய தூதராக பணியாற்றும் மெஸ்கோவ்வும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால், தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக தான் கருத முடியும் என கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் பறந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்துவிட்டு எந்த வீரவசனத்தையும் பேசுங்கள் என நேட்டோ அமைப்பிற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோவில் இணையக்கூடாது என மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போர் புரிந்து வரும் நிலையில், தற்போதைய மோதல் போக்கு மேலும் மேலும் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.

Tags: fighter jetsEstoniaEstonian Foreign MinistryRussian MiG-31 fighter jetsNATO Secretary General Margrethe von der LeyenRussia violation airspacerussiaUnited StatesRussia warningWorld War III
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

Next Post

மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, எல்.முருகன் பங்கேற்பு!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies