லட்சங்களில் வருமானம் வழங்கும் ஆங்கில வெள்ளரி : புது முயற்சியால் பொள்ளாச்சியை கலக்கும் இளம் விவசாயி!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லட்சங்களில் வருமானம் வழங்கும் ஆங்கில வெள்ளரி : புது முயற்சியால் பொள்ளாச்சியை கலக்கும் இளம் விவசாயி!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சியில் ஆங்கில வெள்ளரி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இளம் விவசாயி ஒருவர், லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பொள்ளாச்சி என்றாலே அனைவரும் முதலில் நினைவுக்கு வருவது, தென்னை மரங்கள்தான். தமிழகத்தில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் பொள்ளாச்சி தேங்காய்களுக்கும், இளநீருக்கும் தனி மவுசு உள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கேரள வாடல் நோய், வெள்ளை பூச்சி தாக்குதல், இலை கருகல் போன்றவற்றால் தென்னை மரங்களில் காய்க்கும் காய்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில்தான், பொள்ளாச்சி பொன்னாயூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் விஜய் என்பவர் மாற்று விவசாயத்தில் இறங்கி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். வேளாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஆங்கில வெள்ளரிக்காய்களை பயிரிட்டுள்ளார். 120 நாட்கள் இடைவெளியில் 50 டன் வரை வெள்ளரி காய்களைச் சாகுபடி செய்ய முடிவதாக அவர் கூறுவது, மற்ற விவசாயிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பசுமை குடில் அமைக்கச் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை செலவாவதாகவும், இதில் 17 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குவதாகவும் அரவிந்த் விஜய் தெரிவிக்கிறார்.

வெள்ளரி விவசாயத்தை தென்னைக்கு மாற்றாகத் தொடங்கியதாகக் கூறும் அவர், தென்னையை காட்டிலும் வெள்ளரி விவசாயம் மூன்று மடங்கு லாபம் தருவதாகக் கூறுகிறார். இவரைப் போலவே, மேலும் சில விவசாயிகளும் பசுமை குடில் அமைத்துத் தக்காளி, உயர் ரக அழகு பூக்கள் உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர்.

சீதோஷன நிலை ஒத்துழைத்தால் அத்தகைய விவசாயமும் வெற்றிப்பெறும் என அரவிந்த் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், சந்தைகளின் தேவைக்கு ஏற்ப அதிக வெள்ளரிக்காய்களை தன்னால் உற்பத்தி செய்ய முடியவில்லையென கூறும் அவர், மற்ற விவசாயிகளும் பசுமை குடில் வெள்ளரி விவசாயம் செய்ய முன்வந்தால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கி அதிக விளைச்சல் மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் அனைவரும் அதிகப்படியான லாபம் ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வேளாண் பட்டதாரி இளைஞரின் இந்தப் புதிய முயற்சிக்கு மற்ற விவசாயிகளிடம் ஆதரவு பெருகி வருகிறது. தென்னை விவசாயத்திற்கு இணையாக, பசுமை குடில் விவசாயத்தை மேற்கொள்ளப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags: ஆங்கில வெள்ளரிEnglish cucumber that provides income in lakhs: A young farmer who is shaking up Pollachi with his new ventureஇளம் விவசாயி
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா : அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Next Post

700 டன் எடையுள்ள கப்பலை பற்களால் கயிறை கடித்தபடி இழுத்து எகிப்தை சேர்ந்த மல்யுத்த வீரர் உலக சாதனை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies