சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது - பிருந்தா காரத்
Oct 9, 2025, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

Web Desk by Web Desk
Oct 6, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சரணாலயம் அமைக்கின்றோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அகில இந்திய துணை தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிருந்தா காரத், வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர்களின் உரிமைகளும், நிலங்களும் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் மலைவாழ் மக்களின் உரிமைகள் அமல்படுத்தப்படவில்லை என்றும், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் நில உரிமைகள் கேட்டு அளித்த மனுக்களில் பாதிகூட அரசால் ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மலைவாழ் மக்களுக்கான சட்டங்களையும், உரிமைகளையும் அமல்படுத்தி பழங்குடியினர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மலைவாழ் மக்களினுடைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகப் பிருந்தா காரத் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக ஒருவர் சனிக்கிழமை மட்டும் வேலை செய்யும் வகையில் கட்சியைத் தொடங்கி உள்ளதாகத் தவெக தலைவர் விஜய்யை மறைமுக விமர்சித்தார். கேரளாவை போன்று மலை புலையர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், மலைப் புலையர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு பதிலாக ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க அதிகாரிகள் தவறாகக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் சண்முகம் கூறினார்.

Tags: Tribal people's right to life is being taken away in the name of establishing a sanctuary - Brinda Karatபிருந்தா காரத் கண்டனம்
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

Next Post

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

Related News

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies