உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா - பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!
Jan 14, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள சர் கிரீக் எல்லைப் பிரச்னை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது… இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

சர் கீரிக் என்பது குஜராத்தின் கட்ச் பகுதியையும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் பிரிக்கும், 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நில கழிமுக நீர்ப்பாதை. இத்தனை நீளம் இருந்தாலும் இதன் அகலம் வெறும் எட்டு கிலோமீட்டர்தான். இந்தக் கரைக்கு வந்தால் குஜராத்தின் கட்ச் பகுதி. மறு கரைக்குப் போனால் பாகிஸ்தானின் சிந்து மாகாணம்.

இந்நிலையில், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள சர் கிரீக் எல்லைப் பிரச்னை, தற்போது இரு நாடுகளுக்குமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கலாக மாறியுள்ளது. உப்பு ஏரியாகக் கருதப்படும் சர் கிரீக் யாருக்குச் சொந்தம் என்பது சுதந்திரம் வாங்கிய காலம் முதலே தீர்க்கப்படாத பிரச்னையாக இருக்கிறது.

வெறும் உப்புத்தண்ணீர்தானே என்று விட்டுக் கொடுத்தால் போகப் போகத் தங்கள் நிலமும் ஆக்கிரமிக்கப்படும் என்று இரு நாடுகளுமே நினைக்கின்றன. அதோடு, அள்ள அள்ளக் குறையாத மீன் வளம் கொண்ட இந்தக் குட்டிக் கடல், இரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்குத் தொழில் ஆதாரமாக இருக்கிறது.

மேலும், இயற்கை எரிவாயு வளம் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இருநாடுகளும் உரிமை கோருகின்றன. 1965-ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தச் சர்ச்சை பெரிதாக வெடித்தது. 1924-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின் பம்பாய் மாகாணத்துக்கும், சிந்து மாகாணத்துக்கும் இடையே எல்லையை நிர்ணயம் செய்ய, இந்தக் கழிமுகத்தின் நடுப்பகுதியில் 46 இடங்களில் தூண்கள் நிறுவப்பட்டன.

இதையே எல்லையாகக் குறிப்பிட்ட இந்தியா, ”கரையிலிருந்து 4 கி.மீ தூரம் வரை எங்கள் பகுதி. அங்கிருந்து 4 கி.மீ. பாகிஸ்தானுடையது” என்கிறது. ஆனால் முழு ஏரியாவும் வேண்டும் என அடம்பிடிக்கிறது பாகிஸ்தான். இப்படி உரிமை கொண்டாடினாலும், பாகிஸ்தான் ராணுவம் இந்தப் பகுதியில் ரோந்து வருவதில்லை. நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படைதான் இங்குப் பாதுகாப்புப் பணியைச் செய்கிறது.

ஏனென்றால், சர் கிரீக் என்பது மிகவும் ஆபத்தான ஏரி.ஆபத்தான அலைகளும் சுருட்டி இழுத்துக்கொள்ளும் சுழல்களும் நிறைந்த நீர்ப்பகுதி. கொந்தளிக்கும் தண்ணீரால் நீருக்கடியில் திடீர் திடீர் என மணல் மேடுகள் உருவாகும் என்பதால் ரோந்து வருவதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அச்சம். ஆனால், இந்திய வீரர்களோ, மணல் திட்டுக்களில் சிக்காதபடி தட்டையான படகுகளை வடிவமைத்து ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தியா சர் கிரீக் நீர்வழிப்பாதையை ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது என்றால், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சிக்கு செல்லும் கடல் வழி முழுவதுமாக இந்திய கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனால் ராணுவ ரீதியாகப் பெரும் ஆதிக்கம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ இந்த பகுதியைப் பயன்படுத்துவதால், அதற்கும் முடிவுரை எழுத முடியும்.

சர் கிரீக் சதுப்பு நில கழிமுக பாதையை இந்தியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்பது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சின் மூலம் திட்டவட்டமாகி உள்ளது. சர் கிரீக்கில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டால், வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்குக் கடுமையான பதிலடியை பாகிஸ்தான் எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜ்நாத் சிங் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் சர் கிரீக் எல்லைப் பிரச்சினை, இருநாடுகளுக்கு இடையே மீண்டும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Tags: Indiapakistanஇந்தியா-பாகிஸ்தான்India and Pakistan celebrate the licensing of the salt lake: The Sir Creek issue has once again become a flashpoint
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

Next Post

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies