கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று 8-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இந்த சூழலில், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.