என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!
Oct 15, 2025, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டுவரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது தலைமைக்காக முதல்முறையாக விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழரான என்.சந்திரசேகரனின் அனுபவம் டாடா குழுமத்தை மேலும் வளர்ச்சியை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை கொண்டிருக்கிறது டாடா குழுமம். ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வளர்ச்சி பாதைக்குத் திரும்பியவர் யாரென்றால் டாடா சன்ஸின் தலைவரும், தமிழருமான என்.சந்திரசேகரன் தான்… அவரது பதவிக்காலத்தில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தடைகளைத் தாண்டிய வளர்ச்சியைப் பெற்றது.

ஒரு பக்கம் அதிகார மோதல் தலையெடுத்துள்ள நிலையில், நம்பிக்கை நட்சத்திரமான என்.சந்திரசேகரனின் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்து டாடா அறக்கட்டளை…. நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது டாடா குழுமத்தின் விதி.

அதே நேரத்தில் அப்பதவியில் இருக்கும் நபர் விருப்பப்பட்டால், 70 வயது வரை Non-executive பதவியில் தொடரலாம். இந்த முக்கியமான விதியைத் தளர்த்தி, என்.சந்திரசேகனுக்கு 3வது முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கிறது டாடா அறக்கட்டளை.

டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, செயலில் உள்ள தலைமைப் பதவிக்கு ஓய்வு விதியைத் தளர்த்துவது இதுவே முதல் முறை…. செப்டம்பர் மாதம் நடந்த டாடா அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்குப் பல்வேறு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன… டாடா குழுமம் அடுத்த 30 ஆண்டுக்கான வளர்ச்சி பாதையைத் திட்டமிட்டுள்ள நிலையில், செமிகண்டக்டர், எலெக்ட்ரிக் வாகனப் பேட்டரிகள், ஏர் இந்தியா போன்ற முக்கிய திட்டங்களைக் கையாள தொடர்ச்சியான அனுபவம் மிக்கத் தலைவர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-இல் அனுபவமுள்ள என். சந்திரசேகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார். 2017 ஜனவரியில் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு, 2022 பிப்ரவரியில் இரண்டாவது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டது.

என்.சந்திரசேகரன் தலைமையில், டாடா குழுமம் கடந்த 5 ஆண்டுகளில் வருவாயைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது, நிகர லாபம், சந்தை மூலதனத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.

செமிகண்டக்டர், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பு மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கியமான திட்டங்களை, நிர்வாகத் தலைமை நேரடியாகப் பார்ப்பது அவசியம் என்று கருதப்பட்டது.

டாடா குழுமத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், செலவு அதிகரிப்பு அல்லது தவறான நடவடிக்கைகள் குழுவின் நம்பகத்தன்மை அல்லது நிதி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் . எனவேதான் என்.சந்திரசேகரனின் திறமை மற்றும் அனுபவத்தை இழக்க விரும்பாத டாடா குழுமம் அவரது பதவியை நீட்டித்துள்ளது.

Tags: tataN. Chandrasekaran's term extension: This has never happened in the Tata Groupடாடாஎன்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Next Post

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

Related News

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

மதுரையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies