விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!
Jan 14, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார்.

அப்போது, அனைவரும் பேசுவதற்கு முன்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேரவையில் முன்வைக்க விரும்புகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது எனக் கூறினார்.

தவெகச் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 11 நிபந்தனைகள் உடன் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், போதிய எண்ணிக்கையில், அதாவது 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டதாகவும், கரூர் கூட்டத்தில் மொத்தம் 606 போலீசார் பணியில் இருந்தது கவனிக்கத்தக்கதாகவும் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர் வருவர் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்த நிலையில், அதைவிட அதிகமாக வருவார்கள் என்று கணித்துக் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகக் கூறினார்.

ஆனால், அறிவிக்கப்பட்ட பகல் 12 மணிக்கு வராமல் மாலை 7 மணிக்குத் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

காலை முதல் காத்திருந்த மக்களுக்குக் குடிநீர், கழிப்பறைப் போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

கூட்டத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது எனவும் விளக்கமளித்தார். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் போது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தாக்கியதாகவும் கூறினார்.

கரூர் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் தன்னால் வீட்டில் இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைப் பிணவறையில் உடல்களை வைக்கப் போதிய வசதி இல்லை எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார்.

Tags: முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்கரூரில் கூட்ட நெரிசல்karurtvk vijaytvktoday TN ASSEMBLYtvk vijay campaignCrowd in Karur due to Vijay's late arrival: Chief Minister Stalin's explanation in the Legislative Assembly
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

Next Post

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies