சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
சென்னையின் முக்கிய கடற்கரைகளான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியது.
அதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரையிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
பட்டினப்பாக்கம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து கடற்கரை மணலில் விதவிதமான பட்டாசுகளை வெடித்து சிறுவர்களும் மகிழ்ந்தனர்.