50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் - முழு விவரம்!
Oct 25, 2025, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Web Desk by Web Desk
Oct 25, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் 6 ஆயிரத்து 450 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 604 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் 79 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் 77 ஆயிரத்து 593 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 96 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடை மடை பகுதியான நாகை மாவட்டம் 30 ஆயிரத்து 100 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 37 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 67 ஆயிரத்து 815 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் 39 ஆயிரத்து 700 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 93 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 19 ஆயிரத்து 856 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் இந்த 5 மாவட்டங்களும் சேர்த்து 2 லட்சத்து 32 ஆயிரத்து 843 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டவையாகும். இதன் மூலம் 9 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 5 லட்சத்து 66 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningCAUVERY DELTA DISTRICTChennai metro logical deptKuruvai paddy cultivationtamilnadu raincultivation areaimdheavy rainPaddy
ShareTweetSendShare
Previous Post

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Next Post

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies