உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் என்று மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பார் போற்றும் புகழுடைய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களது 1040 ஆவது சதய விழா, இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பெருவிழா வெகு சிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலன், கலை, கட்டிடக்கலை, விவசாயம் என அனைத்துத் துறைகளும், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில் சிறந்து விளங்கின.
காலாட்படை, குதிரைப்படை, யானை படை என முப்படைகளும், வலிமையான கப்பற்படையும் கொண்டு, உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்.
சோழ மரபின் பொற்காலமாக விளங்கிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியின் புகழைக் கூறும் சதய விழாவை , அனைவரும் சிறப்புடன் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















