இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 09:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு காலத்தில் இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்த வங்கதேசம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியை ஐக்கிய அரபு அமீரகம் வழியாகத் துபாயிலிருந்து வாங்குகிறது. அதிக விலை கொடுத்து இந்திய அரிசியை வங்கதேசம் வாங்க காரணம் என்ன? என்பது பற்றித் தற்போது பார்க்கலாம்.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம் ஆகும். சுமார் 140 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்தால் சர்வதேச சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பாலைவன நகரமான துபாய், அரிசியை உற்பத்தி செய்வதில்லை.

அரிசிக்கு முழுவதும் இறக்குமதியையே அந்நாடு நம்பியுள்ளது. இந்நிலையில், துபாயில் இருந்து அரிசி கொள்முதல் செய்வதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. அதுவும் இந்திய அரிசி என்று வங்கதேச உணவுத் துறை கூறியுள்ளது. வங்கதேசத்துக்கு அரிசி விநியோகிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் துபாயில் உள்ளதாகவும் அது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி என்றும் உறுதி படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய வாய்ப்பு இருந்தும் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, ஒரு இடைத்தரகர் மூலம் அரிசியை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக விலைக்குக் கொள்முதல் செய்வது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. முன்னதாகக் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, மியான்மர் மற்றும் துபாயிலிருந்து மொத்தம் 100,000 டன் அரிசியை வாங்க வங்கதேச அரசின் அரிசி கொள்முதல் ஆலோசனைக் குழு ஒப்புதல் கொடுத்தது.

மியான்மரிலிருந்து 50,000 டன் (Atap) அட்டாப் அரிசியும், துபாயிலிருந்து 50,000 டன் பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியும் மொத்தம் 446.23 கோடி டாக்கா பணத்துக்கு கொள்முதல் செய்யப் படும் என்று கூறப் பட்டுள்ளது. உணவு பற்றாக்குறையை த் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அது அரசின் கொள்கை முடிவு என்றும் கூறியுள்ள அந்நாட்டு உணவு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவின் இயக்குனர் முகமது மோனிருஸ்மான், சுமார் 1.5 மில்லியன் டன் அரிசி இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதிக விலைக்கு இந்திய அரிசியை வங்கதேசம் துபாயில் இருந்து வாங்குவதற்கு இந்தியாவுடனான நல்லுறவை யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கெடுத்துக் கொண்டதே காரணம் என்று அரசியல் மற்றும் வணிக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் அடைந்த பிறகு, வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நட்பை வளர்ப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.

வங்கதேசம் என்ற ஒரு நாடு உருவாக்கிக் கொடுத்த இந்தியாவை புரக்க்கணித்ததோடு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தார் யூனுஸ். சுற்றிலும் நிலங்களால் சூழப்பட்ட இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களின் கடல் பகுதி பாதுகாப்பு வங்கதேசத்திடம் உள்ளது என்றும், அந்தப் பகுதி விரைவில் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான பகுதியாக மாறுமென்றும் சீனா சென்றிருந்தபோது அறிவித்தார்.

தொடர்ந்து, இந்தியாவிலிருந்து நிலம் வழியாக நூல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம் கட்டுப்பாடு விதித்தது. இதற்குப் பதிலடியாக வங்கதேசத்துக்கான டிரான்ஷிப்மென்ட் வசதியை இந்தியா ரத்து செய்தது.

மேலும், ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மரத்தால் ஆன நாற்காலி, மேசை போன்ற பொருட்களைச் சாலை வழியாக இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு தடை விதித்தது.

வங்கதேசப் பொருட்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் இந்தியா விதிக்கவில்லை. மாறாகத் தரை வழியாக இறக்குமதி செய்வதற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. பாதைகளை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது. கூடுதலாகக் கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள துறைமுகங்களில் மட்டுமே ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது இந்தியா.

யூனுஸ் முன்னெடுத்த தவறான நடவடிக்கைகளால், இந்தியாவுடனான வங்கதேசத்தின் வர்த்தக உறவுகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அதிகமாகச் சார்ந்திருப்பதாலும், உள்நாட்டு ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் வங்கதேசத்தின் வர்த்தக பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவுடனான சிக்கலால் சுமார் 770 மில்லியன் டாலர் இழப்பை வங்கதேசம் சந்திக்கிறது. இது இருதரப்பு இறக்குமதியில் 42 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி யூனுஸ் தலைமையிலான வங்க தேசம் தனக்குத்தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறதே தவிர இதனால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags: Indiaவங்கதேசம்Retaliation for hating India: Bangladesh imports Indian rice through Dubai
Share
Tweet
SendShare
Previous Post

முக்கிய கமாண்டர்களின் தொடர் கொலைகளில் விலகாத மர்மம் : உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் லஷ்கர் தலைவர்!

Next Post

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies