திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 29, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் பஞ்சப்பட்டி கிராமத்தில் அரசு பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த இந்துக்களுக்கும் உரிமையுள்ளது எனக்கூறி, அன்னதான நிகழ்வுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்த, கிறிஸ்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்து மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிறிஸ்தவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட மைதானத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு தந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தாங்கள் மட்டுமே மைதானத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில், என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளதாகவும், கோயில் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அனைவருக்கும் உரிமையுள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த தடை விதிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக, மைனாரிட்டியாக வாழும் இந்துக்களுக்கான உரிமையை மறுப்பது சட்டவிரோதம் எனக்கூறிய நீதிபதி, பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: Dindigul: Permission for food distribution event - High Court orders
Share
Tweet
SendShare
Previous Post

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

Next Post

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Related News

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies