ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!
Mar 20, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பாளையங்கோட்டையில், ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான பேருந்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பேருந்து வசதியின்மை காரணமாக மக்கள் படும் துயரங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றோடு அரசு அலுவலகங்களும் நிறைந்திருக்கும் பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி திகழ்ந்து வருகிறது. நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் கல்வி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாளையங்கோட்டைக்கு ரயில்மூலம் வந்து பேருந்து நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

ஆனால், பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் இடையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைப்பதற்கான பேருந்து வசதிகள் போதுமான இல்லாத காரணத்தினால் திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 20 ரூபாய் பயணக் கட்டணத்தில் ரயில் மூலமாகப் பாளையங்கோட்டைக்கு வரும் பயணிகள், அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆட்டோவிற்காகச் செலவழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் போதிய பேருந்து வசதியின்றி இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து வசதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் தங்களின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பதால் வசதி வாய்ப்பில்லாத பலர் 5 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து செல்கின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருவது தனது கடமை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து ரயில் நிலையத்திற்கும் போக்குவரத்திற்கும் இடையில் போதுமான பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருநெல்வேலிRailway Station TO Bus Station - Sorry for not having enough buses runningதென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
ShareTweetSendShare
Previous Post

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Next Post

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

Related News

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies