ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பாளையங்கோட்டையில், ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான பேருந்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பேருந்து வசதியின்மை காரணமாக மக்கள் படும் துயரங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றோடு அரசு அலுவலகங்களும் நிறைந்திருக்கும் பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி திகழ்ந்து வருகிறது. நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் கல்வி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாளையங்கோட்டைக்கு ரயில்மூலம் வந்து பேருந்து நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

ஆனால், பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் இடையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைப்பதற்கான பேருந்து வசதிகள் போதுமான இல்லாத காரணத்தினால் திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 20 ரூபாய் பயணக் கட்டணத்தில் ரயில் மூலமாகப் பாளையங்கோட்டைக்கு வரும் பயணிகள், அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆட்டோவிற்காகச் செலவழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் போதிய பேருந்து வசதியின்றி இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து வசதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் தங்களின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பதால் வசதி வாய்ப்பில்லாத பலர் 5 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து செல்கின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருவது தனது கடமை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து ரயில் நிலையத்திற்கும் போக்குவரத்திற்கும் இடையில் போதுமான பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டுதிருநெல்வேலிRailway Station TO Bus Station - Sorry for not having enough buses running
ShareTweetSendShare
Previous Post

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Next Post

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies