ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!
Aug 7, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பாளையங்கோட்டையில், ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான பேருந்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பேருந்து வசதியின்மை காரணமாக மக்கள் படும் துயரங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றோடு அரசு அலுவலகங்களும் நிறைந்திருக்கும் பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி திகழ்ந்து வருகிறது. நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் கல்வி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாளையங்கோட்டைக்கு ரயில்மூலம் வந்து பேருந்து நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

ஆனால், பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் இடையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைப்பதற்கான பேருந்து வசதிகள் போதுமான இல்லாத காரணத்தினால் திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 20 ரூபாய் பயணக் கட்டணத்தில் ரயில் மூலமாகப் பாளையங்கோட்டைக்கு வரும் பயணிகள், அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆட்டோவிற்காகச் செலவழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் போதிய பேருந்து வசதியின்றி இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து வசதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் தங்களின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பதால் வசதி வாய்ப்பில்லாத பலர் 5 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து செல்கின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருவது தனது கடமை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து ரயில் நிலையத்திற்கும் போக்குவரத்திற்கும் இடையில் போதுமான பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருநெல்வேலிRailway Station TO Bus Station - Sorry for not having enough buses runningதென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
Share
Tweet
SendShare
Previous Post

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Next Post

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

Related News

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies