குவியும் குப்பைகளால் துர்நாற்றம் - சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!
Aug 7, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் தற்போது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் பகுதிகளாக மாறிவருகின்றன. சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளும், சாலைகளில் ஓடும் கழிவுநீரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவதோடு சர்வதேச சுற்றுலாத்தலங்களில் முதன்மையாக விளங்கும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொடைக்கானலின் சீதோசன நிலையையும், இயற்கை அழகையும் ரசிக்க இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ஆங்காங்கே கொட்டியிருக்கும் குப்பைகள் அவர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் அள்ள வேண்டிய குப்பையை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அகற்றுவதாலும், அளவுக்கு மீறிய குப்பைகளும் சாலையோரங்களில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கொடைக்கானல் பிரதான சாலையில் பெருமாள் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குப்பைமேடுகளை அகற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதில் உள்ள நெகிழிப்பைகளை உண்டு ஏராளமான வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் முதன்மையானதாகத் திகழும் கொடைக்கானலில் நிலவும் சுகாதார சீர்கேடுகள், அதன் நற்பெயரையும் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளன.

உடனடியாக மாவட்ட நிர்வாகவும் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Tags: சுற்றுலாப் பயணிகள்Accumulating garbage causes foul smell - tourists are embarrassedமலைகளின் இளவரசி
Share
Tweet
SendShare
Previous Post

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

Next Post

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies