குவியும் குப்பைகளால் துர்நாற்றம் - சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!
Jun 23, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் தற்போது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் பகுதிகளாக மாறிவருகின்றன. சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளும், சாலைகளில் ஓடும் கழிவுநீரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவதோடு சர்வதேச சுற்றுலாத்தலங்களில் முதன்மையாக விளங்கும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொடைக்கானலின் சீதோசன நிலையையும், இயற்கை அழகையும் ரசிக்க இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ஆங்காங்கே கொட்டியிருக்கும் குப்பைகள் அவர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் அள்ள வேண்டிய குப்பையை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அகற்றுவதாலும், அளவுக்கு மீறிய குப்பைகளும் சாலையோரங்களில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கொடைக்கானல் பிரதான சாலையில் பெருமாள் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குப்பைமேடுகளை அகற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதில் உள்ள நெகிழிப்பைகளை உண்டு ஏராளமான வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் முதன்மையானதாகத் திகழும் கொடைக்கானலில் நிலவும் சுகாதார சீர்கேடுகள், அதன் நற்பெயரையும் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளன.

உடனடியாக மாவட்ட நிர்வாகவும் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Tags: சுற்றுலாப் பயணிகள்Accumulating garbage causes foul smell - tourists are embarrassedமலைகளின் இளவரசி
ShareTweetSendShare
Previous Post

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

Next Post

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies