அடுத்தடுத்து புயல்கள் - ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!
Nov 9, 2025, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயலை தொடர்ந்து உருவான ஃபங்-வோங் புயல் தற்போது கரையை கடந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

அண்மையில் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளை முற்றிலும் உருக்குலைத்தது. கடுமையான வெள்ளப்பெருக்கால் பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கின. புயல் பாதிப்பு காரணமாகச் சுமார் 5 லட்சம் மக்கள், வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 109 பேர் மாயமானதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், அந்தப் புயலை தேசிய பேரிடராகவும் அறிவித்தது. இப்படி பெரும் சேதத்தை ஏற்படுத்திய கல்மேகி புயல் 2 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது.

இதனால், பிலிப்பைன்ஸ் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், அந்த நிம்மதி பெருமூச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்குள்ளாகவே, பிலிப்பைன்ஸை மற்றொரு சக்தி வாய்ந்த புயல் தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஃபங்-வோங் எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் எனவும், குறைந்தது 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் ஒரு புயலை எதிர்கொள்ள அந்நாட்டு அரசும், மக்களும் தயாராகினர். பிகோல் பகுதியில் அதிகபட்சமாக 200 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டதால், அங்குத் தேசிய மீட்புப்படை வீரர்கள் நூற்றுக்கணக்கில் முகாமிட்டனர். மறுஎச்சரிக்கை வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லச் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கும் கடல்பகுதிகளுக்கு செல்வதை தடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

ஃபங்-வோங் புயல் காரணமாகப் பிலிப்பைன்சின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன், தென்கிழக்கு லூசோன் பகுதிக்கு 5ம் எண் எச்சரிக்கையும், மணிலா உள்ளிட்ட பகுதிகளுக்கு 3ம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Fung-wong புயல் கரையை நெருங்க நெருங்க 185 கிமீ முதல் 230 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. கல்மேகி புயலின்போது ஏற்பட்டதை போலவே, பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பலத்த காற்று காரணமாக, கிழக்கு விசயாஸின் பகுதிகளில் உள்ள பல இடங்களில் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் Fung-wong புயல் ஒரு வழியாகக் கரையை கடந்தது. இந்தப் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு நிலவரம்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tags: ஆடிப்போன பிலிப்பைன்ஸ்A series of storms - the Philippines is devastated!
ShareTweetSendShare
Previous Post

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Next Post

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Related News

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

மென்பொறியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வேலை கிடைக்க உதவிய சாட் ஜிபிடி!

கழிவுபொருட்களை விற்றதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies