தமிழகத்திற்கு ஆயிரத்து 720 கோடி ரூபாய் முதலீட்டில் வரவேண்டிய தென்கொரிய தொழிற்சாலை ஆந்திரா சென்றுவிட்டதாக பாஜாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலினும், தொழில் துறை அமைச்சரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும், அவர்கள் பெருமையாக அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தென்கொரிய நிறுவனம் ஆயிரத்து 720 கோடி ரூபாய் முதலீட்டில், 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பெரிய அளவிலான தொழிற்சாலையை அமைக்க ஒப்புக் கொண்டதாக தமிழக தொழில்துறை அமைச்சர் அறிவித்தார் என்றும்,
மூன்று மாதங்களுக்குள் இந்த முதலீட்டை ஆந்திரப்பிரதேசத்துக்கு மாற்ற அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிற மாநிலங்கள் உலகளாவிய உற்பத்தியை ஈர்க்க வேகமாக செயல்படும் நேரத்தில், அலட்சியம் மற்றும் நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழகம் தனது நிலையை இழந்து வருவதகாவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
















