களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் படையெடுத்தனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சில ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருட்களை பயன்படுத்தும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு இயற்கை விவசாயமே தீர்வு என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை சாத்தியமாக்கும் முயற்சியாகத்தான் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சி.

கோவை ‘கொடிசியா’ அரங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக கொடிசியா ஏ, பி அரங்குகளில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஸ்டால்கள் இடம்பெற்றன.

இயற்கை வேளாண் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை சுகந்தி என்ற பெண் தொழில் முனைவோர் உருவாக்கினார். “நாங்கள் தயாரிக்கும் வாழை நார் பொருட்களுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வாழை மட்டை நாரில் செய்யப்பட்ட எங்களது மாலையை பிரதமர் ஏற்றுகொண்டார்” எனக் கூறும் சுகந்தி, இது எங்களின் இத்தனை நாள் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இதுதவிர பாரம்பரிய நெல் வகைகளை ஒரே இடத்தில் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியது இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவையெல்லாம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட நெல் வகைகள்…. இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமனால் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன…

இயற்கை வேளாண் விவசாயத்தின் அடிப்படையே மண்தான்…. அந்த மண்ணை வளமாக்க ஒவ்வொரு குடிமகனும் தமது வீட்டில் குப்பைகளை உரமாக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்…. என்கிறார் மக்கும் குப்பைகளை உரமாக்கும் நடைமுறைகளை கேரளாவில் சாத்தியமாக்கி வரும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நான்சி… இவர் இந்த இயற்கை வேளாண் கண்காட்சியில் ஸ்டால் அமைத்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

கரும்பு, வாழை, காய்கறிகள், பயிர் வகைகள், உரங்கள், மண்ணை உயிர்ப்போடு வைக்கும் இயற்கை பூச்சி கொல்லி மருந்துகள் என இயற்கை வேளாண்மைக்கு உதவும் பல காரணிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. மருந்து தெளிக்க, நீர் பாய்ச்ச, பூச்சி கொல்லி தெளிக்க அதிக திறன் கொண்ட ட்ரோன், கால்நடை, மீன் வளர்ப்புகளுக்கு உதவும் தொழில் நுட்ப கருவிகள் என கண்காட்சியில் இடம்பெற்ற தொழில் நுட்ப கருவிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.

உணவை சரியானதாக உண்ணும் போது அதுவே மருந்தாக செயல்படுகிறது… ஆனால் ரசாயனம் கலந்த பூச்சி கொல்லி உரங்களால் உணவே நாளடைவில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் காரணியாக மாறி விடுகிறது. இந்த நிலையில்தான் இயற்கை வேளாண்மைக்கு மாறி, எதிர்கால தலைமுறைக்கு நல்ல உணவை சாத்தியப்படுத்த நம் விவசாயிகள் தயாராகி விட்டனர் என்பதையே இந்தக் கண்காட்சி பறைசாற்றியது.

Tags: Kodisia Hallorganic farming conferenceNel Jayaraman...prime minister narendra modicoimbatorefarming exhibition
ShareTweetSendShare
Previous Post

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Next Post

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies