தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 03:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என புகழ்பெற்றதுதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்புக்கு பின் கோயம்பேட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தனியாரிடம் ஒப்படைத்த மின்சார பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனையாக பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்….

போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 12 வருட ஒப்பந்தத்தில் மின்சார பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதனை இயக்கும் ஓட்டுநர்களையும் தனியார் நிறுவனமே அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்கு மட்டும் அரசு பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக வியாசர்பாடி பணிமனையை மாதாவரத்திற்கும் அடுத்து பெரும்பாக்கம் பணிமனையை செம்மஞ்சேரிக்கும் மாற்றியது மாநகர போக்குவரத்து கழகம். தற்போது பூந்தமல்லி பணிமனையை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 6 மற்றும் 7வது நடைமேடைகளுக்கு மாற்றி உள்ளனர்.

கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் காலியாக பூந்தமல்லி வரை சென்று வழித்தடங்களில் இயங்குவதோடு, பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிபுரியும் பணிமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து துறையே நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் போது அதை தனியாரிடம் ஒப்படைப்பதால் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பணிமனைகளை மாற்றுவதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் காலியாக ஓடும் பேருந்துகளால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையில் நடக்கும் இந்த மாற்றத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

Tags: Electric busMunicipal Transport Corporationtamil nadu governmentKoyambedu bus stand.Chennai's Koyambedu Bus StationKlampakkam Bus Station
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவின் இ – பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு? : ஷாக்கில் உறைந்த ஸ்கேன்டிநேவியன் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies