நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு - முதலமைச்சர்களுக்கு கடிதம்!
Jan 14, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 18ஆம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 22ஆம் தேதி மாவோயிஸ்ட் சிறப்பு மண்டல குழுவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாவோயிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளையும், ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சரணடைய விரும்புவதாகவும், மாநில அரசுகள் வழங்கும் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மாவோஸ்ட்டுகள் சரணடைய அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூன்று மாநில அரசுகளும் நிதானத்தை கடைப்பிடித்து, தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தங்கள் முறையீட்டின் பின்னணியில் எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்றும்,
தொலைதுாரத்தில் உள்ள போராளிகளுக்கு தகவல் சென்று சேரும் வகையில், தங்களது கோரிக்கையை அடுத்த சில நாட்களுக்கு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: State Chief MinistersMaoists surrender announcementmadhya pradeshwest bengalTelanganaChhattisgarhJharkhandMAHARASHTRAMaoists
ShareTweetSendShare
Previous Post

மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?

Next Post

ஓபிஎஸ் தலைமையில் தனிக்கட்சி – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies