சென்னையின் தென்கிழக்கு பகுதியில் 540 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது. இது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னையின் தென்கிழக்கு பகுதியில் 540 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, 8 முதல் 11 அடி வரை கடல் அலை மேலெழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்நிலையில், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
















