சென்னை மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக மேடவாக்கத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு தெருக்களில் புகுந்துள்ளது.
இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததாலேயே வெள்ளம் தேங்கி உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென மாநகராட்சிக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















