சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்தது : உலகளவில் இந்திய ஆயுதங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!
Jan 13, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்தது : உலகளவில் இந்திய ஆயுதங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச அளவில் இந்திய ராணுவ தளவாடங்களுக்கான மவுசு அதிகரித்துள்ள நிலையில், நமது அண்டை நாடான சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச ஆயுத சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் கூட, பாரதத்தில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிலும், தளவாடங்கள் ஏற்றுமதியும் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன.. Stockholm International Peace Research Institute அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டுக்கான உலகளாவிய ஆயுத ஏற்றுமதி குறிப்பிடத் தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.

உலகளவில் ஆயுத வருவாய் 679 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டைவிட 5.9 சதவிகிதம் அதிகம் என்பது சாதனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றினாலும், சீன ஆயுத நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆசியா, ஓசியானியா பிராந்தியங்கள் பெரும்பாலும் சரிவைக் கண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் ஆயுதத் தொழில் உலக ஆயுத சந்தையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும், ஆயுத வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய், 2024ம் ஆண்டில் மட்டும் 8.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Stockholm International Peace Research Institute-இன் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு 6.9 பில்லியன் டாலராக இருந்து ஆயுத வருவாய், 2024ம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ரேடார் அமைப்புகள், மின்னணு போர் உபகரணங்களுக்கான உள்நாட்டு ஆர்டர்களை பெறுவதன் மூலம் வருவாய் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகளவில் 44வது இடத்தில் உள்ள HAL நிறுவனம் 3.81 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளது. விநியோகங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக முந்தைய ஆண்டை காட்டிலும் வருவாய் சிறிதளவு குறைந்துள்ளது. கடற்படை கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்தும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ், நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல் உற்பத்தியின் மூலம், 9.8 சதவிகிதம் வருவாய் அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சியானது, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட இந்தியாவின் “ஆத்மநிர்பர் பாரத்” அல்லது சுயசார்பு இந்தியா திட்டங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்தியா ராணுவ தளவாடங்கள் உற்பத்தியைப் பெருக்குவது, வழக்கமான ஆயுத விநியோகஸ்தர்களுக்கான சவால் அளிக்கும் வகையிலான வலுவான தொழில்துறை வளர்ச்சியைக் குறிப்பதாக SIPRI அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கு நேர்மாறாக, ஆயுத சந்தையில் சீனாவின் நிலை பலவீனமடைந்துள்ளது.SIPRI அறிக்கையின்படி, டாப் 100 இல் உள்ள சீனாவின் 8 ஆயுத உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைந்த வருவாய் 10 சதவிகிதம் குறைந்து,88.3 டாலராக உள்ளது. இந்தச் சரிவு, அதன் பாதுகாப்புத் துறையில் ஊழல்கள், தலைமை மாற்றங்களால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.அதன்படி சீனாவின் முன்னணி உற்பத்தியாளரான NORINCO, வருவாயில் 31 சதவிகித வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் ராணுவ செயற்கைக்கோள் திட்டங்களில் தாமதங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் 16 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.

சீனாவின் சரிவு ஆசியாவின் ஒட்டுமொத்த ஆயுத வருவாயை எதிர்மறையாகப் பாதித்தாலும், பிற பிராந்திய சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டன. தென் கொரியாவின் ஆயுத உற்பத்தி 31 சதவிகிதம் அதிகரித்து 14.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஜப்பானின் ஆயுத சந்தையும் கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது.

முதல் 100 இடங்களில் உள்ள 39 அமெரிக்க நிறுவனங்கள் ஆயுத வருவாயில் 334 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளன. இது உலகளாவிய விற்பனையில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஆயுத நிறுவனங்களின் வருவாய் 13 சதவிகிதம் அதிகரித்து 151 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்குப் பதிலளிக்கும் விதமாக ராணுவச் செலவு அதிகரித்ததே இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் மற்றும் உற்பத்தியில் தொடர்ச்சியான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா மற்றும் இஸ்ரேல் நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் சவால்களை எதிர்கொண்டாலும், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சந்தைகளை குறிவைத்து, இந்தியா தனது ஆயுத ஏற்றுமதியை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tags: indian armytoday newsChina's arms exports decline: Global demand for Indian weapons increasesIndianewschina
ShareTweetSendShare
Previous Post

CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!

Next Post

மக்களவையில் சிறப்பு விவாதத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies