CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!
Sep 11, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு உலகையே மாற்றி வருகிறது… பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே ஏ.ஐ. ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன, செய்து வருகின்றன. ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியால், உண்மையில் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் பணி பாதுகாப்பு இல்லை என்று எச்சரிக்கிறார் ஏ.ஐ., குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல்.

ஏ.ஐ. உங்களைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும் என்று அவர் கூறியதில் இருந்து மருத்துவத் துறைக்கு ஆபத்து அதிகமாகியுள்ளது. நாம் எதையெல்லாம் வேலை என்று அழைக்கிறோமோ அவை அனைத்தையும் ஏ.ஐ. அமைப்புகள் செய்வதாகக் கூறிய அவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த, பாதுகாப்பான பதவிகள் கூட, ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டதாக எச்சரிக்கிறார்.

ஒருவர் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாற விரும்புகிறார் என்றால், அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறும் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஆனால், அதனைக் கற்றுக்கொள்ள ரோபோவுக்கு ஏழே வினாடிகள் போதும் என்று கூறியிருக்கிறார்.

இதுவரை பெரும்பாலான பணிநீக்கங்கள், நடுத்தர மற்றும் கீழ்மட்ட ஊழியர்களை பாதித்திருந்தாலும், நீண்டகாலத்திற்கு, நிர்வாகிகள் கூட பாதுகாப்பான பதவிகளில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்.

அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முடிவுவெடுக்கும் அதிகாரத்திற்குள் வந்தால், அப்போது CEO-க்களின் கதியும் அதோ கதிதான் என்று குறிப்பிடுகிறார் ஸ்டூவர்ட் ரஸ்ஸல்… உலகளவில் ஒவ்வொரு அரசும் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போவதாக நம்பும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், சர்வதேச சமூகம் தற்போது 80 சதவிகித வேலையின்மையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் உள்ள அனைவருக்கும் AI ஒரு ஆபத்தாக மாறும் என்று நினைப்பது ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மட்டுமல்ல. கடந்த மாதம், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் கருத்தும்கூட.. ஆண்ட்ரூ யாங் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி போன்ற சிலர், அமெரிக்காவில் கோடிக்கணக்கான பதவிகள் பறிபோகலாம் அல்லது மாற்றப்படலாம் என்று மதிப்பிட்டாலும், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் மெட்டாவின் யான் லீகன் உள்ளிட்டோர், AI வேலையை நீக்குவதற்குப் பதிலாக மாறும் என்று தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர். எனினும் ரஸ்ஸலின் எச்சரிக்கை விரிவானது, சில தொழில்கள் மட்டுமே மனித ஆற்றலை தாங்கி நிற்கும் என்று கூறுவது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டியவையே.

Tags: No one can escapeincluding CEOs and SURGEONS: 80% of jobs will soon be lost due to the development of A.I.IndiaAIworld newsAI technologyNEWS TODAY
Share
Tweet
SendShare
Previous Post

காங்டோ மலையில் பறக்கும் மூவர்ணக்கொடி : மலையேற்றத்திலும் சாதனை படைத்த ராணுவ வீரர்கள்!

Next Post

சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்தது : உலகளவில் இந்திய ஆயுதங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies