CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!
Jan 13, 2026, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு உலகையே மாற்றி வருகிறது… பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே ஏ.ஐ. ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன, செய்து வருகின்றன. ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியால், உண்மையில் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் பணி பாதுகாப்பு இல்லை என்று எச்சரிக்கிறார் ஏ.ஐ., குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல்.

ஏ.ஐ. உங்களைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும் என்று அவர் கூறியதில் இருந்து மருத்துவத் துறைக்கு ஆபத்து அதிகமாகியுள்ளது. நாம் எதையெல்லாம் வேலை என்று அழைக்கிறோமோ அவை அனைத்தையும் ஏ.ஐ. அமைப்புகள் செய்வதாகக் கூறிய அவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த, பாதுகாப்பான பதவிகள் கூட, ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டதாக எச்சரிக்கிறார்.

ஒருவர் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாற விரும்புகிறார் என்றால், அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறும் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஆனால், அதனைக் கற்றுக்கொள்ள ரோபோவுக்கு ஏழே வினாடிகள் போதும் என்று கூறியிருக்கிறார்.

இதுவரை பெரும்பாலான பணிநீக்கங்கள், நடுத்தர மற்றும் கீழ்மட்ட ஊழியர்களை பாதித்திருந்தாலும், நீண்டகாலத்திற்கு, நிர்வாகிகள் கூட பாதுகாப்பான பதவிகளில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்.

அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முடிவுவெடுக்கும் அதிகாரத்திற்குள் வந்தால், அப்போது CEO-க்களின் கதியும் அதோ கதிதான் என்று குறிப்பிடுகிறார் ஸ்டூவர்ட் ரஸ்ஸல்… உலகளவில் ஒவ்வொரு அரசும் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போவதாக நம்பும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், சர்வதேச சமூகம் தற்போது 80 சதவிகித வேலையின்மையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் உள்ள அனைவருக்கும் AI ஒரு ஆபத்தாக மாறும் என்று நினைப்பது ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மட்டுமல்ல. கடந்த மாதம், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் கருத்தும்கூட.. ஆண்ட்ரூ யாங் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி போன்ற சிலர், அமெரிக்காவில் கோடிக்கணக்கான பதவிகள் பறிபோகலாம் அல்லது மாற்றப்படலாம் என்று மதிப்பிட்டாலும், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் மெட்டாவின் யான் லீகன் உள்ளிட்டோர், AI வேலையை நீக்குவதற்குப் பதிலாக மாறும் என்று தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர். எனினும் ரஸ்ஸலின் எச்சரிக்கை விரிவானது, சில தொழில்கள் மட்டுமே மனித ஆற்றலை தாங்கி நிற்கும் என்று கூறுவது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டியவையே.

Tags: IndiaAIworld newsAI technologyNEWS TODAYNo one can escapeincluding CEOs and SURGEONS: 80% of jobs will soon be lost due to the development of A.I.
ShareTweetSendShare
Previous Post

காங்டோ மலையில் பறக்கும் மூவர்ணக்கொடி : மலையேற்றத்திலும் சாதனை படைத்த ராணுவ வீரர்கள்!

Next Post

சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்தது : உலகளவில் இந்திய ஆயுதங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies