கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் 2-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இது தொடர்பாகச் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரர் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
தற்போது கோவை மத்திய சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் இந்த வழக்குகுறித்து நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது. இந்நிலையில், கைதான 3 பேர் மீதும் ஏற்கெனவே திருட்டு வழக்கு உள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
















