முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்ப துறையில் பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாபெரும் புரட்சியால், மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

உலகின் ஒவ்வொரு நகர்வும் தொழில்நுட்ப சார்ந்ததாக மாறியிருக்கும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவும் தொழில்நுட்ப பயன்பாட்டில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக DIGITAL WORLD-ல் கால்தடம் பதித்து இந்தியா தனக்கெனத் தனி இடம் பிடித்திருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியாவில் முதலீடுகளை குவிக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலகளவில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றன.

பிரதமர் மோடியுடன் இந்நிறுவனங்களின் உயரதிகாரிகள் சந்திப்பு நடத்திய பிறகு இந்த ஆர்வம் பெரிதளவில் காணப்படுகிறது. அதுவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே யார் அதிக முதலீடு செய்வது என்ற போட்டி நிலவுகிறது என்றே கூறலாம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஏஐ தரவு மையம் அமைக்கக் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில், அதற்குப் போட்டியாக 17 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிய அளவில் ஏஐ துறை சார்ந்த முதலீட்டில் இதுவே அதிகம் எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவில் மட்டுமல்ல, செமிகண்டெக்டர் உற்பத்தியிலும் முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸாக இந்தியாவே இருக்கிறது. இன்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிப் பூ தன், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திய நிலையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து இன்டல் நிறுவனம் செமிகண்டெக்டர் உற்பத்தியில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறது.

இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த பணியாளர்கள் அதிகம் இருப்பதாகவும், இதன் காரணமாகே உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் போட்டி போட்டு முதலீடுகளை குவிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அளவில் உள்ள சிப் டிசைன் என்ஜினியர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்கள் உதாரணம் தெரிவிக்கிறார்கள். இது மட்டுமல்ல, பாஜக அரசு தொழில்நுட்ப துறை சார்ந்து வகுக்கும் கொள்கைகளும் இதில் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவிக்கின்றனர்.

மற்ற நாடுகளை காட்டிலும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொள்கை வகுக்கப்படுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உற்பத்திக்கு ஏற்றால் போல், விற்பனைக்கான சூழலும் சாதகமாக இருப்பதால், இனி இந்தியாவின் வளர்ச்சி வேகத்திடம், ராக்கெட்டே தோற்று போகும் என அடித்துக் கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Tags: DIGITAL WORLDIndiaஇந்தியாFirst choice of leading companies: India attracts investments
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு – அமேசான் அதிரடி அறிவிப்பு!

Next Post

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies