H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் - கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!
Mar 15, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விசா பெறுவதற்காக டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த நேர்காணல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐடி ஊழியர்களின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

அமெரிக்க அரசு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி வரும் நிலையில், டிரம்ப் அரசு தற்போது பிறப்பித்த உத்தரவு அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் எனக் கனவு காணும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் கனவை பாழாக்கியுள்ளது. H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் அனைத்து விண்ணப்பதாரரின் சமூக ஊடக கணக்குகளையும் சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டினர் மத்தியிலும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் திடீர் உத்தரவால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் இந்நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளன. டிரம்ப் அரசின் புதிய உத்தரவு, டிசம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், H-1B, H-4 விசா விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்களை அமெரிக்க தூதரகங்கள் ஒத்தி வைக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான நேர்காணல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகங்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், புதிய விதிமுறை காரணமாக ஒரு நாளில் செய்யப்படும் நேர்காணல் எண்ணிக்கை குறையும் என்பதால், டிசம்பர் இரண்டாம் பாதியில் நடைபெறவிருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு மார்ச் 2026க்கு ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்தப் புதிய விதிமுறை குறித்து அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹாலிஸும், AI ஆலோசகர் அன்புமன் ஜாவும் கூறுகையில், இந்தியர்களுக்கு இந்தப் புதிய விதி கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதால், தனிநபர் பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்றது முதல் குடியுரிமை விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வந்த ட்ரம்ப், அண்மை காலமாக மனமாற்றம் அடைந்திருந்தார்.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு H-1B வழங்கப்படுவது அவசியம் என்றெல்லாம் கூறிவந்தார். ஆனார், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, ட்ரம்ப் மீண்டும் அடம்பிடிக்க தொடங்கி இருப்பதால், H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா ? வேண்டாமா ? எனக் குழம்பி போயிருக்கின்றனர் விண்ணப்பதாரர்கள்.

Tags: H1B visaH-1B விசாNew rules for applying for H-1B visa: Postponed interview - Social media accounts monitoredகண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்americausaDonald Trump
ShareTweetSendShare
Previous Post

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies