H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் - கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!
Jan 14, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விசா பெறுவதற்காக டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த நேர்காணல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐடி ஊழியர்களின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

அமெரிக்க அரசு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி வரும் நிலையில், டிரம்ப் அரசு தற்போது பிறப்பித்த உத்தரவு அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் எனக் கனவு காணும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் கனவை பாழாக்கியுள்ளது. H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் அனைத்து விண்ணப்பதாரரின் சமூக ஊடக கணக்குகளையும் சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டினர் மத்தியிலும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் திடீர் உத்தரவால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் இந்நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளன. டிரம்ப் அரசின் புதிய உத்தரவு, டிசம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், H-1B, H-4 விசா விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்களை அமெரிக்க தூதரகங்கள் ஒத்தி வைக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான நேர்காணல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகங்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், புதிய விதிமுறை காரணமாக ஒரு நாளில் செய்யப்படும் நேர்காணல் எண்ணிக்கை குறையும் என்பதால், டிசம்பர் இரண்டாம் பாதியில் நடைபெறவிருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு மார்ச் 2026க்கு ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்தப் புதிய விதிமுறை குறித்து அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹாலிஸும், AI ஆலோசகர் அன்புமன் ஜாவும் கூறுகையில், இந்தியர்களுக்கு இந்தப் புதிய விதி கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதால், தனிநபர் பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்றது முதல் குடியுரிமை விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வந்த ட்ரம்ப், அண்மை காலமாக மனமாற்றம் அடைந்திருந்தார்.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு H-1B வழங்கப்படுவது அவசியம் என்றெல்லாம் கூறிவந்தார். ஆனார், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, ட்ரம்ப் மீண்டும் அடம்பிடிக்க தொடங்கி இருப்பதால், H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா ? வேண்டாமா ? எனக் குழம்பி போயிருக்கின்றனர் விண்ணப்பதாரர்கள்.

Tags: americausaDonald TrumpH1B visaH-1B விசாNew rules for applying for H-1B visa: Postponed interview - Social media accounts monitoredகண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்
ShareTweetSendShare
Previous Post

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies