திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?
Jul 21, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஊழல் எப்படி நிகழ்ந்தது? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கபட்டதாகக் கடந்தாண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாகவே, தேசியளவில் முக்கிய பேசுபொருளானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததும், பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த லட்டு விவகாரமே இன்னும் ஓயவில்லை. அதற்குள் திருப்பதியில் வழங்கப்படும் சால்வையிலும் ஊழல் நடைபெற்றள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அத்துடன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் ஏழுமலையானை தரிசனம் செய்யத் திருப்பதிக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு வரும் பிரபலங்களுக்குத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படும். அதேபோல், 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கும் ரங்க நாயக மண்டபத்தில் இந்தச் சால்வை அணிவிக்கப்படும். இதனால், திருப்பதி லட்டு போலவே, திருப்பதி சால்வையும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

திருநாமம், சங்கு, சக்கரம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும் இந்தச் சால்வைகள் பட்டு நூலால் தயாரிக்கப்படுகின்றன. நெய்யை போலவே, இந்த சால்வைகளும் டெண்டர் முறையில்தான் வாங்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு முதல் VRS Export என்ற நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பட்டுச் சால்வைகளை விநியோகம் செய்து வருகிறது. ஒரு சால்வையின் விலை ஆயிரத்து 389 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தச் சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் எழவே, பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியத்திற்கு அவை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

சோதனையின் முடிவில் அந்தச் சால்வைகளில் தூய பட்டுக்கு பதிலாக, தூய பாலிஸ்டர் பயன்படுத்தப்பட்டிருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்தபடி, 100 சதவீத தூய மல்பெரி பட்டை கொண்டு இந்தச் சால்வைகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்த எடை 180 கிராமாகவும், இந்தியப் பட்டு மார்க் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ‘சில்க் மார்க்’ முத்திரையும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பட்டுக்கு பதிலாகப் பாலிஸ்டரால் சால்வையை தயாரித்துவிட்டு, அதில் சில்க் மார்க் முத்திரையைப் பதித்து VRS Export நிறுவனம் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 350 மதிப்புள்ள பாலிஸ்டர் சால்வை, ஆயிரத்து 300 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டதன் மூலம், 54 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. லட்டு விவகாரம் போலவே, சால்வை விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்கு தற்போது ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags: templettdTirumala tirupathi templeIs there a multi-crore scam in shawls offered at Tirupati Ezhumalaiyan Temple?
ShareTweetSendShare
Previous Post

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

Next Post

தென்கிழக்கு ஆசியாவை கலங்கடித்த புயல் பாதிப்பு : டிட்வா போன்ற புயல்கள் இனியும் ஏற்படலாம் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies