தென்கிழக்கு ஆசியாவை கலங்கடித்த புயல் பாதிப்பு : டிட்வா போன்ற புயல்கள் இனியும் ஏற்படலாம் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Jul 23, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தென்கிழக்கு ஆசியாவை கலங்கடித்த புயல் பாதிப்பு : டிட்வா போன்ற புயல்கள் இனியும் ஏற்படலாம் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிட்வா உள்ளிட்ட புயல்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதற்கு என்ன காரணம் என்பதற்கு விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதுகுறித்தத செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அண்மையில் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட சென்யார் மற்றும் டிட்வா புயல்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தின. இந்தோனேஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 250 பேர் மாயமாகினர்.

இலங்கையில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மலேசியாவில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த நிலையில், தாய்லாந்தில் 181 பேர் உயிரிழக்க நேரிட்டது. மேலும், இந்த அனைத்து நாடுகளிலும் பல பில்லியன் டாலர் பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த 2 புயல்களும் இத்தனை தீவிரமடைந்தது ஏன் என்பதற்கு ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் முதன்மையானது, காலநிலை மாற்றம். குறிப்பாக, வங்கக்கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரித்ததால்தான், இரு புயல்களும் ஆக்ரோஷமாக மாறியதாகவும், காடுகள் அழிப்பு போன்ற பிற காரணங்கள், இந்த புயல்களை மேலும் மோசமாக்கியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் வடக்கு பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை அண்மை காலமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1991ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான சராசரி வெப்பநிலையை காட்டிலும் 0.2 சதவீதம் வெப்பநிலை அதிகரித்திருப்பதையும் அவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

கடலின் மேற்பரப்பில் ஏற்பட்ட இந்த மாற்றம், அங்கு உருவான புயலுக்கு அதிக ஆற்றலையும், வெப்பத்தையும் வழங்கியதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. கடற்பகுதிகளில் 0.2 சதவீதம் வெப்பநிலை உயர்ந்துள்ளதென்றால், நிலப்பகுதியில் 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், கடலின் மேற்பகுதியில் கடந்த மாதம் ஒரு டிகிரி வெப்பம் குறைந்திருக்கும் எனவும், புயல்கள் இத்தனை தீவிரத்தை அடைந்திருக்காது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில் புயல்கள் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், தற்போது காலநிலை மாற்றமானது புயல்களின் வீரியத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ராயல் நெதர்லாந்து வானிலை நிறுவத்தின் ஆய்வாளரான சாரா க்யூ, புயல்களின் போக்கில் தென்படும் இத்தகைய தீவிரமும், அவற்றால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளும் இயல்பானதல்லஎனக் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தால், மலாக்கா ஜலசந்தியில் 50 சதவீதம் வரையும், இலங்கையில் 160 சதவீதம் வரையும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், சென்யார், டிட்வா போன்று பிற நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Cycloneடிட்வா புயல்Cyclone impact that devastated Southeast Asia: Cyclones like Titva may occur again - scientists warn
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?

Next Post

மீண்டும் “சிரிக்கும் புத்தர்?” : அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் இந்தியா!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies