அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்குத் தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்கள், திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களை எச்1பி விசா மூலம் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தி வந்தன.
இந்த விசாவுக்கான கட்டணம் 1 லட்சத்து 80 ஆயிரம் முதல் 4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 9 கோடியில் அமெரிக்க குடியுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் டனில் தொடங்கி வைத்தார்.
டொனால்டு ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்தை எதிர்த்து கலிஃபோர்னியா, நியூயார்க், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி, வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்கள் பாஸ்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
















