குளோபல் சவுத் : இந்தியா - எத்தியோப்பியா மாறும் உலக ஒழுங்கு!
Mar 19, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குளோபல் சவுத் : இந்தியா – எத்தியோப்பியா மாறும் உலக ஒழுங்கு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 09:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக ஒழுங்கு குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியாவுக்கும் எத்தியோப்பாவுக்கும் இடையிலான ஆழமான உறவுகள், சர்வதேச ஒழுங்கை மறுவரை செய்துள்ளன. பிரதமர் மோடியின் எத்தியோப்பிய பயணம், தெற்கின் வலிமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வாஸ்கோட காமாவின் கடல் பயணங்கள் 1490-களில் தொடங்கிய பின் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவுடன் ஐரோப்பியர்கள் வர்த்தகம் செய்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்திற்கு முன்பே இந்தியாவும் எத்தியோப்பியாவும் வர்த்தக உறவைக் கொண்டிருந்தன. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களுடன் வர்த்தகம் செய்யச் செங்கடலில் உள்ள அதுலிஸ் துறைமுகம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து மசாலா பொருட்கள் மற்றும் பட்டு ஆடைகளை இறக்குமதி செய்த எத்தியோப்பிய மக்கள் பதிலுக்குத் தங்கம், தந்தம் போன்ற பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். கடந்த 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குஜராத்தை சேர்ந்த இந்தியர்களே முதன்முதலில் எத்தியோப்பியாவில் குடியேறத் தொடங்கினர்.

இப்போது எத்தியோப்பியாவில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். எத்தியோப்பியாவில் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்தியர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள்1948 ஆம் ஆண்டிலேயே தொடங்கின. 1950-ல் இந்தியாவுக்கான முதல் எத்தியோப்பியா தூதராக அடோ அமானுவேல் ஆபிரகாம் நியமிக்கப் பட்டார். இதன் மூலம் டெல்லியில் தூதரகத்தைத் திறந்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை எத்தியோப்பியா பெற்றது.

பேரரசர் ஹெய்லி செலாசியின் காலத்திலும் அதற்குப் பிறகு ஜனநாயக ஆட்சிக் காலத்திலும் இந்தியாவுடன் நல்லுறவையே எத்தியோப்பியா கொண்டுள்ளது. பனிப்போருக்குப் பிந்தைய காலத்திலும் விமான சேவைகள் வர்த்தகம், மைக்ரோ அணைகள் மற்றும் சிறிய அளவிலான நீர்ப்பாசன ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வெளியுறவு நெறிமுறை, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் கூட்டு வர்த்தகக் குழு ஒப்பந்தம் என இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்நிலையில், கடந்த வாரம் எத்தியோப்பியாவுக்கு அரசு முறை பயணமாகச் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அந்நாட்டின் உயரிய விருதான ‘கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதும் வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் எத்தியோப்பியப் பிரதமர் டாக்டர் அபி அகமது அலியும் அரசியல், பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

ஜி20 பொதுக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், சுங்கத்துறை விஷயங்களில் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, எத்தியோப்பிய மாணவர்களுக்கான இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் உதவித்தொகையை உயர்த்துவது, ஐநா சபையின் அமைதி நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டு உள்ளன.

கூடுதலாக, தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள மிக முக்கியமான வெளிநாட்டு முதலீட்டாளர்களில் இந்திய நிறுவனங்களே தொடர்ந்து முன்னணியில் உள்ளன. அந்நாட்டில் 675-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் உள்ளன. பிரதமர் மோடியின் வருகையால் மேலும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய முதலீடுகள் வந்துள்ளன என்று கூறப் படுகிறது.

கடந்த நிதியாண்டில், இருதரப்பு வர்த்தகம் 550.19 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.இதில் இந்திய ஏற்றுமதி 476.81 மில்லியன் அமெரிக்க டாலராகவும், எத்தியோப்பியாவிலிருந்து இறக்குமதி 73.38 மில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தது. இந்தியா-எத்தியோப்பியா உறவுகள் ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் தொலைநோக்குடைய பாதையில் முன்னேறியுள்ளது. இது இந்தியாவின் ஆப்பிரிக்கா உத்தி என்றும், உலகளாவிய தெற்கின் இந்தியாவின் குரல் என்றும் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: PM ModiGlobal South: India - Ethiopia: A changing world orderகுளோபல் சவுத்
ShareTweetSendShare
Previous Post

அசாமில் திறக்கப்பட்ட “BAMBOO ORCHIDS” முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!

Next Post

25% கூடுதல் வரியை உடனே நீக்கிவிடுங்கள் – அமெரிக்காவுக்கு ஃபைனல் டீல் வழங்கிய இந்தியா…!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies