அசாமில் திறக்கப்பட்ட "BAMBOO ORCHIDS" முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!
Jul 21, 2026, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாமில் திறக்கப்பட்ட “BAMBOO ORCHIDS” முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமில் பிரதமர் மோடி திறந்துவைத்த கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், வட-கிழக்கு இந்தியாவின் விமான சேவைகளுக்குப் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காண்லாம்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது வட-கிழக்கு மாநிலங்களுக்கு விமான பயணத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளது. நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த முனையம், “BAMBOO ORCHIDS” என அழைக்கப்படுவதுடன், இயற்கையை மையமாகக்கொண்ட நாட்டின் முதல் விமான முனையமாகவும் அமைந்துள்ளது.

1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முனையத்தின் புதிய கட்டடம் ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது எனவும், மேம்படுத்தப்பட்ட ரன்வே வசதிகள் மூலம் இது ஒரு மணி நேரத்திற்கு 34 விமானங்கள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முனையம் வட-கிழக்கு இந்தியாவின் பாரம்பரியக் கலையையும், இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் கையாளப்பட்டுள்ள 140 டன் மூங்கில்கள், கலைமிகு உட்கட்டமைப்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 57 காபோப் பூ தூண்கள், காசிரங்கா தேசிய பூங்காவின் வனச் சின்னங்கள், ஜாபி நுட்பங்கள், மஜூலி தீவின் பாரம்பரிய அம்சங்கள் போன்றவையும் பயணிகளை கவரும் வகையில் உள்ளன.

அதேபோல, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி முனையத்திற்குள் வரும் தருணத்தில் “SKY FOREST” எனப்படும், வன அமைப்புச் சூழலை அவர்கள் அனுபவிக்க முடியும். ஒரு லட்சம் உள்ளூர் தாவரங்களை உள்ளடக்கிய அப்பகுதி பயணிகளுக்குக் காற்றழுத்தம் குறைந்த, இயற்கை சார்ந்த அமைதியான அனுபவத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், கவுகாத்தியில் திறக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் வட-கிழக்கு இந்தியாவின், விமான சேவைகளுக்கு புதிய தரநிலையை ஏற்படுத்தும் முக்கிய மையமாக உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: "BAMBOO ORCHIDS" முனையம்PM Modi"BAMBOO ORCHIDS" terminal opened in Assam: A new chapter for North-Eastern air servicesவட-கிழக்கு விமான சேவைபுதிய அத்தியாயம்BAMBOO ORCHIDS
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை – திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

Next Post

குளோபல் சவுத் : இந்தியா – எத்தியோப்பியா மாறும் உலக ஒழுங்கு!

Related News

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies